உயிரினால் உயிர் தருபவள் அன்னை உருவாக்கி உறுத்தருபவள் அன்னை...
உயிரினால் உயிர் தருபவள் அன்னை
உருவாக்கி உறுத்தருபவள் அன்னை
முதல் உயிர் தந்த என் அன்னை
அனுதினமும் காத்திடுமாறு வளர்த்திட்டார் அண்ணனை
தூசியும் தாக்காது சிறுவயதில் காத்த அன்னை
அன்னை அசந்த நேரமத்தில் எனக்காக
தேள்கடியை தாங்கி அதைக்கண்டு நான் அழ
தேள் கடித்தத்தையும் அறியாது என்
அழுகையை போக்க கொஞ்சினான்
அன்னை வந்து என்னை தூக்கு
நான் அழுகையில் கூறியதை அறிந்து
தேள்கண்டு அண்ணனை காப்பாற்ற
அலறி சென்றார் அன்னை ...
இன்னும் பல உண்டு சொல்ல ஒருநாள் போதாது எனவே வாழ்த்து சொல்லி முடிக்கிறேன் !
முதல் ஆசிரியரும் அகிலமே மறந்து
அன்பு வைக்கும் என் அண்ணனும்
எனக்கொரு அன்னையே ...
என் இரு அன்னைக்கு பணிகிறேன் ...
அன்னை தின நல்வாழ்த்துக்கள் !!