எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீமைகள் ஒழியட்டும் -வாழ்வில் தேனாறு பாயட்டும். ஊமைகள் இல்லாத...

தீமைகள் ஒழியட்டும் -வாழ்வில்

தேனாறு பாயட்டும்.
ஊமைகள் இல்லாத - ஒரு
உலகமது பிறக்கட்டும்..

தேவைகள் எல்லாமும் -தினம்
தடையின்றி கிடைக்கட்டும்
பாதைகள் மாறாமல் -உயர்
பண்போடு நடக்கட்டும்

இல்லார் இலையென்னும் -ஒரு
இறுமாப்பு வளரட்டும்
எல்லோரும் நல்லாரே -எனும்
எண்ணமது  நிலைக்கட்டும்.

தேயும் மனத இனம் -இனி
திடம்பெற்று வாழ்ந்திடவே
நேயமுடன் வாழ்த்துபல-தீப
ஒளிநாளில் வழிங்குகின்றேன்.

அன்புடன்
பொதிகை மு.செல்வராசன்



நாள் : 7-Oct-17, 6:12 pm

மேலே