தேடிச்சோறு நிதந் தின்று -பலசின்னஞ் சிறு கதைகள் பேசி...
தேடிச்சோறு நிதந் தின்று
-பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக வுழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவமெய்தி
கொடும்கூற்றுக் கிரையென பின்மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வே னென்று நினைத்தாயோ?
- மகாகவி பாரதியார்