தூவானம் சாரல்சிதற தொலைவிலாடும் தோகைமயிலாய் என்காதல் ஏற்றுதனை அருகேவந்து...
தூவானம் சாரல்சிதற தொலைவிலாடும் தோகைமயிலாய் என்காதல் ஏற்றுதனை அருகேவந்து அணைத்தவளே
ஆவாரம் பூக்கள்உதிர அலைததும்பும் குகைகொண்ட குறுகுளத்தை குருகுலமாய் மாற்றியெனை மகிழ்வித்தவளே...!
பாலாடை பதுமைநீயா தேனாடை கொய்தகிளையா பொன்னாடை போர்த்திநிற்கும் பன்னாட்டு வணிகன்சிலையா...!
மேலாடை படர்ந்துகொண்ட கார்மேகக் கூந்தலதில் நல்வாடை நான்முகர இடைக்காலத் தடையா...?
நாவாடலில் நளினம்குறையா திசைநான்கும் திரும்பத்தடையா
இதழாடலில் இன்பம்மிகையா இமைகளிரண்டும் இசையத்தடையா...?
தடம்புரளும் என்மனதை தயங்காது அனுதினமும்
வடம்பிடித்து வலம்வரும் வாழ்க்கைக்கு சொந்தக்காரியா...?
யாரடி நீ...?
பேரரசன் போர்கொடியா தில்லை நடராசன்கண்ட கற்சிலையா
வேரமைத்த தமிழ்மண்ணில்
முல்லை மனம்வீசும் பொற்கொடியா...!
மறுகியஅமுதினில் மலர்ந்தவளா இல்லை உருகியமெழுகினில் உயிர்த்தவளா
இறுகியமனதினில் உறைந்தவளா கொல்லை வருடியதென்றலில் வளர்ந்தவளா...!
உறுபசி தருவித்த நறுமுகையா பிள்ளைத் தமிழ்சிந்தும் முழுநகையா
நறுமணம் தெருவீசும் பருவமலரா
எல்லை எழில்தங்கும் நெடுஞ்சுவரா...!
#ஓவியத்திற்கு_ஒப்பனையாய்_அவளும்
#காவியத்திற்கு_கற்பனையாய்_நானும்