அனுபவத்தின் குரல் - 44 --------------------------------- ஒரு காரியத்தை...
அனுபவத்தின் குரல் - 44
---------------------------------
ஒரு காரியத்தை செய்திட நினைக்கும் போது அல்லது தொடங்கிடும் போது , அதன் மீது முழு நம்பிக்கையும் நிச்சயம் முடிந்திடும் என்ற எண்ணமும் உள்ளத்தில் சிறிதும் சலனமின்றி தோன்றுதல் வேண்டும் .
அப்பொழுதுதான் நமக்கு அதனை செய்து முடித்திட ஆற்றலும் தன்னம்பிக்கையும் மனஉறுதியும் பிறக்கும் .அந்த நேரத்தில் தடுமாற்றமோ சந்தேகமோ எழுமானால் துணிவும் பிறக்காது .காரியம் நிறைவேறாது .அதனால் நாம் சோர்வடைந்து முடங்கிடும் நிலையே உருவாகும் .
முடிவுகளை விரைவில் எடுத்தல் மிக மிக அவசியம் . சிறிது தள்ளிப்போனாலும் அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்க ஆரம்பித்தால் , அந்த செயல் அசைவற்றநிலையாகி எதிர்மறை விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு .
எப்பொழுதும் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை ஆய்ந்து முழுமையாக அறிந்து , அந்த செயலில் முழு ஈடுபாடுடன் விரும்பி நமது நேரத்தை செலவழித்தால் அந்த காரியம் வெற்றியடையும் .
சிந்தித்து துணிவுடன் செயலாற்றினால் வெற்றி உறுதி .
பழனி குமார்