எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கை- இலவச கண்காட்சி அதிகாலையிலே மின்சாரமின்றி மின்னிடும் ஆதவன்...

இயற்கை- இலவச கண்காட்சி

 அதிகாலையிலே மின்சாரமின்றி
மின்னிடும் ஆதவன்
கருவிகள் இல்லாமல் ஒலிக்கும் கடல் அலை ஓசை
தொலைத்த தோழியின் நட்பினை தொடர தூங்காமல் தேடும் தென்றல்
அந்த தென்றலின் தாலாட்டில் பயிற்சியின்றி பரதம் ஆடும் பச்சை தேவதை கூட்டங்கள் (மரம்)
காலத்தின் கவலை உணர்ந்து கண்ணீர் சிந்தும் கார்காலம் மேகங்கள்
அவை மழை என்னும் வடிவில் மண்ணை தொட உருவாகும் ஸ்வரங்கள் (சரிகமபதநி)
அவ்வகை ஸ்வரங்களை ஒண்றினைத்து ஆனந்தராகம் மீட்டும் அருவிகள்
பகையின்றி பாசத்தினை பகிரும் பறவை / விலங்கினங்கள்
காவி நிறம் பட்டுடுத்தி நம்மை காவல் காக்கும் எல்லை சாமியாம் மலை முகடுகள்
அதன் மேல் சிப்பாய்கள் போல தோற்றமளிக்கும் குறுமரஞ்செடி கொடிகள்
பகல் நேரப் பகலவனோடு காதல் கொள்ள இரவு நேரத்தில் நட்சத்திரத் தோழிகளுடன் உலாவரும் நிலவுப்பெண்....
இவையாவும் நமகளித்த கட்டணமில்லா கண்காட்சி தானே?
ஆனால் .....
இதயத்திற்கு இனிமை தரும் இயற்கையோடு இணையாமல் செயலற்ற செயற்கையால் செத்து மடிக்கின்றோம்....
தினம்!!!தினம்!!!!

நாள் : 16-Jul-18, 4:30 pm

மேலே