எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணங்கள் அலைமோதுது எழுதிட ஏராளம்... சிந்தனைகள் சிதறுண்டு கூறுகளாகுது......

எண்ணங்கள் அலைமோதுது
எழுதிட ஏராளம்...


சிந்தனைகள் 
சிதறுண்டு 
கூறுகளாகுது...

நிகழ்வுகள்
நிலைகுலையச்
செய்கிறது...

இழப்புகள்
இதயத்தைத் 
துளைக்கிறது...

நினைவுகள் 
நெஞ்சத்தை 
வருடுகிறது...

இதற்கிடையில் ......

மூன்றாவது 
தொகுப்பும் 
நூலாகிறது...

ஆயுத்தப்
பணிகள் 
தொடர்கிறது...

விரைவில் 
வெளிவர 
காத்திருக்கிறது ..

பழனி குமார் 
11.8.2018  

நாள் : 11-Aug-18, 2:56 pm

மேலே