கடவுள் தேசத்தில் காற்றாற்று வெள்ளம் வா.. வர வேண்டாம்...
கடவுள் தேசத்தில் காற்றாற்று வெள்ளம்
வா.. வர வேண்டாம் என உரைத்தேனா யான் ?
அன்பு வெள்ளமாய் மட்டும் வா..
ஆசை தூறலாய் மட்டும் வா...
பருவ காலப் பொய்ப்பின்றி
பள்ளம் நிரப்ப வா..
தண்டை தெரியக் குமரி நடக்கும்
பாதமாய் நீ வா ...பாந்தமாய் நீ வா ..
உள்ளஞ்சேர்க்கும் பசையாய் நீ வா .
மச்சான் மனம் குளிர பாசமாய் நீ வா .
நீர் நிலை நிரம்ப மட்டும் கொஞ்சமாய் நீ வா
கொஞ்சியே நீ வா வஞ்சியாய் நீ வா
பணிவுடன் பாதம் வீழ்ந்தேன் கதறி விட்டேன்
கெஞ்சி விட்டேன் பக்ஷே கேரளத்திண்டே கோபமேனோ
தவிக்கும் நாடு பல இருக்க
ஏன் பாய்ந்தாய் ஏக அழுத்தமாய் ?
நீ வடியும் வரை கண்ணீர் வடியும் வரை
உன்னிடம் காய் இக்கேரளத்தாய்
: கடையநல்லூரான்