மனிதம். ******"** இரக்க குணமறந்து சேர்த்த பொருளெல்லாம், ஆழிப்...
மனிதம்.
******"**
இரக்க குணமறந்து சேர்த்த பொருளெல்லாம்,
ஆழிப் பேரலை கொண்டு சென்றும்,
ஆசை அடங்கவில்லையே மனிதன் கொண்ட,
அகந்தை அழியவில்லையே அழிவு தெரியலையே!
நீயே உனக்கு சொந்தமானவன் அல்ல,
உன்னில் உள்ளவை அனைத்தும் பிறர்க்கே,
மனிதத்தை மனித நேயத்தை வெளிப்படுத்து,
மரணிக்குமுன் உதவிடு மனிதத்தைக் காத்திடு,
பிறப்பின் பயன் மறந்து வாழ்ந்து,
இறப்பின் முடிவில் கண்ணீரில் கரைவதேன்,
பிறரைக் கெடுத்து வாழாமல் இருப்பதை,
பிறர்க்கு கொடுத்து வாழ்ந்து பார்.
************************