நீயும் நானும்... வானமாய் நீ, வண்ண நிறமாய் நான்....
நீயும் நானும்...
வண்ண நிறமாய் நான்.
நதியாய் நீ,
ஆடும் அலையாய் நான்.
வெள்ளமாய் நீ,
வெள்ளி நுரையாய் நான்.
வெண்பனியாய் நீ,
தாங்கும் பூவாக நான்.
என் இதயமே!
நீயும் நானும்,
நீங்கா நெடுந்தூரப்
பயணம், வாழ்வின்
எல்லை நோக்கி.
சுயசரிதை எழுதி வை,
உன் சுவரின் மீதெங்கும்.
நாளைய சந்ததி காணமாட்டார்கள்.
நாம் மட்டும் படித்து
மகிழ்ந்திருக்க....
நலமாய் எழுதி வை.
நாமறிந்த நமது
மோழியினிலே.......!