எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

>>> பூ மடல்<<<. கருவேலங் காட்டுப் பூவோ கள்ளிச்...

>>> பூ மடல்<<<.              

கருவேலங் காட்டுப் பூவோ
கள்ளிச் செடியில் மலர்ந்த பூவோ
கரிசக்காட்டுப் பூவோ
கயவன் எனை கொள்ளை கொண்ட பூவோ
கண்ணுள் விழுந்து என்னுள்ளே நுழைந்த பூவோ
கட்டில் மேலே மலரப் போகும் பூவோ....!!!

அத்தை வீட்டில் மலர்ந்த பூவோ
அத்திப் பழ இதழ் சுமந்த பூவோ
அல்லிக் குளத்தில் நீந்தும் பூவோ
அடந்தகாட்டில் படந்த கொடியில் மலர்ந்தபூவோ..

ஆகாயத் தாமரையை வென்ற பூவோ
ஆசையுடன் நாகம் அணைக்கும் தாழம்பூவோ
ஆமை ஊர்ந்து முத்தமிடும் அடம்பம் பூவோ
ஆணழகனை மயங்க வைக்கும் ரோஜாப் பூவோ..!!

குறுக்குப் பாதையிலே கொட்டிக் கிடக்கும் அரசம் பூவோ
குழந்தை அழகைக் கொடுக்கும் குங்குப் பூவோ
குச்சி எடுத்து நான் பறிக்கும் திருக் கொன்றைப் பூவோ

முறைத்துப் பார்க்கும் மாமன் வீட்டு அரளிப் பூவோ
முற்றத்தில் விழித்திருக்கும் பூசனிப் பூவோ
முதல் இரவுக்கு வரப்போகும் மல்லிகைப் பூவோ
முத்தங்களை வாங்கப் போகும் தாமரைப் பூவோ...!!

பஞ்சாட்டம் நெஞ்சில் மலரும் பருத்திப் பூவோ
பசி தீர்க்க புசிக்க வரும் செம்பருத்திப் பூவோ
பக்கம் வந்து வெட்கம் கொள்ளும் தொட்டாச்சிணுங்கிப் பூவோ
பார்த்து பார்த்து ஏங்க வைக்கும்
குறிஞ்சிப் பூவோ...!!

இன்ப உறக்கம் கொடுக்கும் மருதாணிப் பூவோ
இச்சையைக் கூட்டி விடும் ஆவாரம் பூவோ
இரவில் காவல் காக்கும் வேம்புப் பூவோ
இதழோடு இதழ் சேர்க்க வரும் கொவ்வைப் பூவோ..!!

பூவே உன்னை நான் நேசிப்பேன்
பூலோகத்தில் உன்னைச் சுவாசிப்பேன்
பூவுக்குள் வண்டாக நான் இருப்பேன்
பூசை செய்து தினமும் யாசிப்பேன்
பூட்டிய வீட்டுக்குள் போகாதே திறந்த
என் இதயத்தில் வந்துவிடு பூவரசியே...!!

பொன்னாரம் நான் போட்டு
கண்ணாரப் பார்த்து உன்
அருகே அமர்ந்திடுவேன்
என் நேரமும் என் பைங்கிளியே...!!!

(இது என் சொந்த படைப்பு யார் இங்கே முன்பு பதிவு செய்தி இருக்கின்றனர்  தற்போது நான் படைப்பு பகுதியில் போஸ் பண்ணும் போது இக் கவிதை முன்பே பதிவானதாக கூறுகின்றனரே   நட்புக்களே உங்கள் பார்வைக்கு வந்தால் கூறுங்கள் 

பதிவு : ஆர் எஸ் கலா
நாள் : 9-Sep-18, 2:39 pm

மேலே