மைவிழியில் கவிஎழுதி -மாமா நினைவாலே தூதுவிட்டேன் வம்பிலேதான் மாட்டிக்கிட்டு...
மைவிழியில் கவிஎழுதி -மாமா
நினைவாலே தூதுவிட்டேன்
வம்பிலேதான் மாட்டிக்கிட்டு -மாமா
ஊரு முன்னே குனிஞ்சு நின்றேன்
ஐயனாரு தோப்புபக்கம் -மாமா
கள்ளு குடிக்க போனதென்ன
கண்சிவந்து வந்ததென்ன -மாமா
கடுங்கோபம் ஆனதென்ன?
ஜிமிக்கி கம்மல் தொங்கலிலே -கள்ளம் வைச்ச- மாமா
ஐயனாரு தோப்பினிலே
ஏலம் வைச்சே ஏனோ
சந்தன மேனிபோல -மாமா
அலைந்தாடும் மாரு மேல
வீணாசைப் பட்டதென்ன
பெண்ணாசை சுட்டதென்ன?
ஆசைக்கு உனை நினைத்தேன் -மாமா
அழகுக்கொரு கொண்டையிட்டு
ஆடிமல்லி சரமிட்டு-மாமா
ஆசை தொட்டில் ஆடகண்டேன்
தஞ்சாவூர் தண்டிகையில் -மாமா
வாக்கபட்டு போகையிலே
கும்பக்கோணம் தாசிப்பொண்ண -
கூட்டிவந்த கோலமென
ஆத்திலே தலைமுழுகி -
காரைகுடி பட்டுடுத்தி மாமா
ஏலேலோ பாடயிலே
இழுக்குதையா என் மனசு
சேலை பறக்குதடி -
மாராப்பு மூலையிலே
பக்கத்திலே நீ இருந்து
பதற வைத்து அணைத்ததென்ன
கைவளையல் ரெண்டும்மின்ன
மோகப்பூ மஞ்சள் மின்ன
முகமுங்கூட மின்னுதடி.
முத்தம்மா மின்னலிலே
காளைநல்ல கறுப்பழகன்
கண்ணாடி மேனியிலே
சூடுவச்ச கள்ளழகன் -
ஆட வைச்சு. சுத்துதடி ஆசை தொட்டில் ராட்டிணமாம்
பூத்தமலர் மூடாதடி -
பூவில்வண்டு ஏறாதாடி
கன்னிவந்து சேராவிட்டால் -
கதவடைக்க முடியாதடி