சுழலும் சூறாவளி காற்றாய் - நீ சுழன்று என்னுள்...
சுழலும் சூறாவளி காற்றாய் - நீ
சுழன்று என்னுள் காதலை வீசுகிறாய்
நிழலாய் என் பின்னே தொடர்ந்து
தழலாய் என் நெஞ்சை சுடுகிறாய்
துளிர்விடும் புல்லினை விட மெல்லிய
தளிராய் உன்னை படைத்தது யாரோ ???
குளிர்கால வெயிலாய் உன் காதல்
எனக்கு கிடைத்தது நான்செய்த தவமோ ???
திசையெங்கும் வீசும் பருவ காற்றின்
விசையாய் என் உயிர் அசைந்தாட
கசையடி விழுந்த தடமாய் - என்
உயிர் முழுவதும் வந்து இசைந்தாயடி
உள்ளுக்குள் புதையலாய் கிடக்கிறது - நம்
உள்ளத்தின் மௌனமான காதல் - அதை
அள்ளி கொள்ள இருவரும் தயக்கம்
கொள்ள அதுதரும் மயக்கம் சுகம்தானோ ???
போகும் தூரம் யாவும் உன்னோடு
போகும் வாழ்க்கை வேண்டும் எனக்கு
சாகும் வரை தீராத காதல்
தாகம் என்றும் தருவேன் உனக்கு...