எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பதவி வரும்போது பணிவை கண்டேன் பணியில் இருக்கும் போது...

பதவி வரும்போது பணிவை கண்டேன்
பணியில் இருக்கும் போது துணிவை கண்டேன்
பாடம் சொல்லி கொடுப்பதில் பொறுமையை கண்டேன்
பழகுவத்தில் நேர்மையை கண்டேன்
உன்னுடைய வாழ்கையில் எளிமையை கண்டேன்
உன்னுடைய பேச்சில் உண்மையை கண்டேன்
நீ பள்ளியை விட்டு பிரியும் போது உன் கண்களில் கண்ணீரை கண்டேன்
அது உண்மையான அன்பின் வெளிப்பாடு என்பதை புரிந்துகொண்டேன்
இதுவே வாழும் முறை என்பதையும் தெரிந்துகொண்டேன்
இதை நான் உன்னிடம் கற்றுக்கொண்டேன்.

நாள் : 11-Oct-18, 1:10 pm

மேலே