எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நானொரு தேவதையை சந்தித்து விட்டு வந்தேன்.... தேவதையென்றதும் கொஞ்சம்...

நானொரு தேவதையை
சந்தித்து விட்டு வந்தேன்....
தேவதையென்றதும்
கொஞ்சம் சிறகுகளோடும்
உஜாலா நீலம் போட்ட-
குட்டை வெள்ளைப்பாவாடைகளோடும்
பலருக்கு ஞாபகம் வரலாம்.....

தாராளமாய்
நீங்கள் வேறு கவிதையை வாசிக்கலாம்.....

இது அதுவல்ல....
அந்த தேவதை
ஆயிரத்து தொளாயிரத்து பத்தோ இருபதிலோ
பிறந்திருக்கலாம்.....

மூன்று தலைமுறையையும்
சுறுக்குப் பையில் வைத்திருக்கும்
குழந்தை அது......
யாரைப் பார்த்தாலும் காதலிக்கும்....

என் மகளின் எதிரிக்கு-
வெத்தலைக் காம்பு கொடுத்ததில்
இன்னும் என் மகளுக்கும்
அந்த தேவதைக்குமான சண்டை தீரவில்லை.......

என் அப்பாவை
எனக்கு தெரிந்து ...........
டேய் கோட்டைச்சாமியென
அழைத்தது அதுவாய் மட்டும்தான்
இருந்திருக்கும்.......

பலமுறை தெய்வமென்று
சொல்லியிருக்கிறார்.....
எனக்கு புரிந்ததில்லை........
புரிந்த போது அப்பா இல்லை..........

அழகான தேவதை ..............

#பொள்ளாச்சிமுருகானந்தம்.

நாள் : 6-Nov-18, 4:33 pm

மேலே