எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊடகங்கள் எப்போதும் இரட்டைமுகம் கொண்டவை. ஊடகவியலாளர்களும் அப்படித்தான். அவர்களின்...

ஊடகங்கள் எப்போதும் இரட்டைமுகம் கொண்டவை. ஊடகவியலாளர்களும் அப்படித்தான். அவர்களின் தொழிலே புகழ்பெற்றவர்களைக்கொண்டுதான்.  ஆகவே அவர்களை தொடந்து நைச்சியம் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு புகழ்மிக்கவர்கள் மேல் எப்போதும் காழ்ப்பு இருக்கும். ஏனென்றால் அந்த ஊடகத்தைப் பயன்படுத்தி அவர்கள் தாங்கள் புகழடைய முயல்வார்கள், அது ஒருபோதும் இயல்வதில்லை. அவர்கள் தற்காலிகமாக ஒரு முகத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடியும்.


ஊடகங்களின் வாசகர்களும் இருமுகம் கொண்டவர்கள். புகழ்பெற்றவர்களை வழிபட்டு, அவர்களைப்பற்றிய செய்திகளைத் தேடித்தேடி வாசித்து மகிழ்வார்கள். ஆனால் அந்த புகழ்பெற்றவர்கள் வீழ்ச்சியடையவேண்டும் என்றும் உள்ளூர விரும்புவார்கள். அந்த வீழ்ச்சியைக் கொண்டாடுவார்கள், அது இவர்களே கற்பனைசெய்துகொண்டதாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு ஊடகங்கள் தீனிபோடுகின்றன 
 
ஆனால் இது இயல்பானது அல்ல. இதில் தமிழகத்தில் சாதிக்கணக்கு மிக வலுவானது. எவர் கிண்டலுக்கும் சிறுமைக்கும் ஆளாகிறார்கள், எவர் மெய்யாகவே சிறுமைப்பட்டாலும் இந்த ஊடகங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை எவரும் காணமுடியும்.


ஜெ
 

நாள் : 5-Dec-18, 4:29 pm

மேலே