எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

· சிந்திடும் பனியிடம் நிலமதன் தவம் ! மழை...

·      சிந்திடும்   பனியிடம்      
       நிலமதன்   தவம் !       
       மழை  வரம்   வேண்டி….. ·   

        ம(ழை)ழலை  மொழி சிந்துவாயா … ?
       மேகத்தாயே … ! 
       நிலத்தந்தை   ஏங்குகிறான் ! ·     


         உழவன்  வியர்வைத்துளி !
        மேகப்பண்ணையாரே !
        கூலிமழைத்   தருவீரா …. ? ·    


        நெகிழி  தந்த  கோபமோ .. ?
       கடலே…..!
        உன்   மழைப்பிள்ளை
       மண்ணை  மறுதலித்ததோ …. ? ·   



         இதழ்  தீண்டிய
         தென்றலே   குளிர்ந்ததடி .. !
          நான்  என்ன  ஆவேனோ … ?     

பதிவு : xavier arun
நாள் : 9-Dec-18, 4:50 pm

மேலே