· சிந்திடும் பனியிடம் நிலமதன் தவம் ! மழை...
· சிந்திடும் பனியிடம்
நிலமதன் தவம் !
மழை வரம் வேண்டி….. ·
ம(ழை)ழலை மொழி சிந்துவாயா … ?
மேகத்தாயே … !
நிலத்தந்தை ஏங்குகிறான் ! ·
உழவன் வியர்வைத்துளி !
மேகப்பண்ணையாரே !
கூலிமழைத் தருவீரா …. ? ·
நெகிழி தந்த கோபமோ .. ?
கடலே…..!
உன் மழைப்பிள்ளை
மண்ணை மறுதலித்ததோ …. ? ·
இதழ் தீண்டிய
தென்றலே குளிர்ந்ததடி .. !
நான் என்ன ஆவேனோ … ?