அறிவுரை அல்ல ஆலோசனை ! ----------------------------------------------------- அறிந்தவர்களை கண்டதும்...
அறிவுரை அல்ல ஆலோசனை !
-----------------------------------------------------
அறிந்தவர்களை கண்டதும் நாம் புன்னகை புரிதல் வேண்டும் .கோபம் வருகின்ற நேரத்தில் எல்லாம் நாம் அமைதியாக இருந்திட வேண்டும் .
அடுத்தவர் உயர்வைக் கண்டு உவகை அடையாவிட்டாலும் ,பொறாமை கொள்ளாமல் இருத்தல் வேண்டும் .முன்னேற்றம் பெற்றவரின் வாழ்க்கையை நாம் என்றும் முன்னுதாரணமாக கொள்ளல் வேண்டும் .
நம் வாழ்க்கை பாதையை தேர்வு செய்வதில் ஆழ்ந்த சிந்தனையுடன் ,தெளிவும் இருத்தல் வேண்டும் .அடுத்தவரிடம் ஆலோசனை பெறுவதும் தவறில்லை .சுய சிந்தனையை வளர்த்துக் கொள்வதும் தவறில்லை . அதில் நேர்மையும் திறமையும் வெளிப்படுதல் வேண்டும்
பகுத்தறிவுடன் பணிவாகவும் ,துணிவுடனும் ,பிறகு உதவிடும் எண்ணமுடனும் , நமது பண்பாடு ,மொழி காத்திடும் உள்ளமும் வேண்டும் .
முதியோர்களையும் பெற்றவர்களையும் போற்றுவதோடு மட்டுமன்றி மதித்தல் வேண்டும் .
இவை அனைத்தையும் நாம் கடைபிடித்தால் நம்முள் ஓர் ஆனந்தமும் ,வாழ்க்கை வசந்தமாகவும் தெரியும் .
பழனிகுமார்
13.01.2019
13.01.2019