மகளின் கவிதை ^^^^^^^^^^^^^^^^ நான் வளர்கிறேனே அம்மா என்...
மகளின் கவிதை
^^^^^^^^^^^^^^^^
நான் வளர்கிறேனே அம்மா
என் வேலைகள்
இனி நானே செய்வேன் !
பள்ளி செல்லும் நேரம்
நீ பம்பரமாய் சுழல்வாய்
குளியல் இன்று எனது !
கண்கள் எரியுது அம்மா
கொஞ்சம் சீக்கிரம் வாயேன்
நீரும் சென்றது உள்ளே
நானும் தவறு செய்தேன்
நீரை நீரால் கழுவிடு அம்மா முள்ளை முள்ளால்
எடுப்பது போல !!