எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் நண்பா அவளறியா வண்ணம் அவள் மேல் நீ...

என் நண்பா
அவளறியா வண்ணம்
அவள் மேல்
நீ கொண்ட காதலை
என்னிடம் ஏன்
சொல்லிவைத்தாய்...
தெரிந்தும்
சேர்க்க இயலா
இந்த பேதையிடம்
பிதற்றாதே இனி...
கலங்கி நிற்கிறேன் நான்
என் இயலாமையை எண்ணி...
மறந்துவிடு என கூறவும்
முடியவில்லை
அது உன்னுள் தரும்
வலி யாதென்பதை 
நானறிவதால்..
அழுதுவிடு என் கூறவும்
முடியவில்லை
நீ உடைவதை
காணமுடியாதென்னால்...
அவளின்
திருமண செய்தி 
கேட்டேனும் 
நற்திசை மாறிடு...

பதிவு : கோமதி
நாள் : 29-Jan-19, 5:09 pm

மேலே