என்று தனியுமோ ....? சாதிகள் இல்லையடி பாப்பா குலம்...
என்று தனியுமோ ....?
சாதிகள் இல்லையடி பாப்பா
குலம் தாழ்த்தி உயர்த்தி சொலல் பாவம்
என்று அன்றே சொன்னான்
சிந்தனை உள்ளமும் சீரிய கருத்தும்
கொண்ட முண்டாசு கவிஞன்
முறுக்கு மீசைக்காரன் சிந்து கவி புனையும்
எங்கள் கவி பாரதி
ஆனால் . . . .
கார்மேகத்தில் காரோட்ட முயலும்
இக்கணிப்பொறி காலத்திலும்
உச்சாணி கொம்பேறி உழல்கிறோம்
பள்ளிக்கு செல்லவும் சாதி
பள்ளியறைக்கு செல்லவும் சாதி
என்று தனியுமோ இந்த சாதி கொடுமை ?
வேதனையில் ...
மு. ஏழுமலை