5 . தலைப்பு : பனித்துளியோடு உரையாடல் தொட்டபோது...
5. தலைப்பு : பனித்துளியோடு உரையாடல்
தொட்டபோது தொலைந்துபோனாய்
கைப்பட்டபோது களைந்து போனாய்
அருகமர நினைத்தபோது
ஆவியாய் மறைந்து போனாய் -
எண்ணங்களை ஆயிரமாயிரமாய்
பிரதிபலித்தாய் - நான்
ஆசையாய் அணைக்கையிலே
அழகே என்னை ஏமாற்றி விட்டாய்
வென் பனியே . . .
நல்வெண் முத்தே ...
வெள்ளை மனதில்லை போலும் உனக்கும்
விளையாடவரும் வாலிபனை
விரட்டியடித்து விம்மி அழச் செய்கிறாய்
வினை செய்யும் நங்கை போல
புல்வெளியில் பூத்துக் குலுங்குகின்றாய்
பச்சிலையில் பாடித் திரிகின்றாய் - நான்
புன்னகையோடு தொட்டால் - ஏனோ
புதிராகின்றாய்!
முகிலோடு உறவாடுகின்றாய்
கதிரோடும் காதல் கொல்கின்றாய்
காலையான் தொட்டால் மட்டும்
ஏனோ கண்ணாமூச்சி ஆடுகின்றாய்
ஏனிந்த மோகம் ?
என்மீது கோபம்
என்னவளும் சொன்னாலோ
என்னை நீ தீண்டக்கூடாதென்று
நான் என்ன தீண்டத் தகாதவனா ?
மு. ஏழுமலை
9789913933