எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

5 . தலைப்பு : பனித்துளியோடு உரையாடல் தொட்டபோது...

5.  தலைப்பு :  பனித்துளியோடு உரையாடல் 


தொட்டபோது தொலைந்துபோனாய் 
கைப்பட்டபோது களைந்து  போனாய் 
அருகமர நினைத்தபோது 
 ஆவியாய்  மறைந்து போனாய் -
எண்ணங்களை ஆயிரமாயிரமாய் 
பிரதிபலித்தாய்  -  நான்
 சையாய் அணைக்கையிலே 
அழகே என்னை ஏமாற்றி விட்டாய் 

வென் பனியே . . . 
நல்வெண் முத்தே ...
வெள்ளை மனதில்லை போலும் உனக்கும்
விளையாடவரும் வாலிபனை 
விரட்டியடித்து விம்மி அழச் செய்கிறாய் 
வினை செய்யும் நங்கை போல 

புல்வெளியில் பூத்துக் குலுங்குகின்றாய்
பச்சிலையில் பாடித்  திரிகின்றாய் - நான் 
புன்னகையோடு தொட்டால் - ஏனோ 
புதிராகின்றாய்!

முகிலோடு உறவாடுகின்றாய் 
கதிரோடும் காதல் கொல்கின்றாய்
காலையான் தொட்டால் மட்டும்
ஏனோ கண்ணாமூச்சி ஆடுகின்றாய்

ஏனிந்த மோகம் ?
என்மீது  கோபம்
என்னவளும்  சொன்னாலோ 
என்னை நீ தீண்டக்கூடாதென்று 
நான் என்ன தீண்டத் தகாதவனா ?

மு. ஏழுமலை 
   9789913933   
 
 

பதிவு : மு ஏழுமலை
நாள் : 16-Feb-19, 2:35 pm

மேலே