6. தலைப்பு : மாற்றம் காணா மனிதர்கள் மதியிலே...
6. தலைப்பு : மாற்றம் காணா மனிதர்கள்
மதியிலே கால் பதித்தும்
மனிதன் மதத்தை விட்டு
இறங்க மறுப்பதேன்
விண்வெளியில் வெற்றிக்கொடி கட்டினாலும்
விதவை மறுமணத்தை
ஏற்க மறுப்பதேன்
சந்திரனிலே குடிகொண்டாலும் - அவன்
சாதி வெறி கொள்வதேன்?
கார்மேகத்திலே காதல் மணம்புரியும்
இவ்விஞ்ஞான உலகத்திலும்
கலப்பு மனதில் மட்டும்
கருத்து கொள்ளாதது ஏன்?
ஓசோனின் ஓட்டை
அறிந்த மனிதா
உன்னுள்ளம் உடைந்திருப்பதை மட்டும்
உணராமல் இருப்பதுதான்
என்ன நியாயம்?
மாட்டு சாணத்திலும்
மகிமை பல கண்டவனே
மதம் கொண்டு மதத்தால்
மனிதனுக்குள் மனிதன்
மாளும் நிலையின்னும் ஏனோ?
இனம் மதம் சாதி
இல்லையென்று கூக்குரலிட்டு
சலுகை கொடுக்கும் சாக்கில்
சாதியென்னும் சாக்கடையில்
தள்ளுவது ஏனோ?
அறிவுப்பசி கொண்டவனிடம்
ஆர்வத்திறமை காணமால்
அதியந்தம் பார்ப்பதேனோ
களைவோம் காழ்ப்புகளை
கரம் கொடுப்போம் பிறர் உயரவே!
மு. ஏழுமலை
9789913933