எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

8 விழிப்பு கொள் விடியலை நோக்குபவனும் வீண் சோம்பலை...

       8    விழிப்பு கொள்

விடியலை நோக்குபவனும் 
வீண் சோம்பலை போக்குபவனுமே 
வீறு கொண்டு எழுகின்றான்
அடலேறாய் முன்னேறி - ஆதவனையும்
எட்டி பிடிக்கின்றான்
 உண்மை உழைப்புடையவன் 
ஊரை  ஏமாற்றுவதில்லை 
ஊரை ஏமாற்றுபவனோ - ஒருபோதும் 
உண்மையாய் உழைக்க நினைப்பதில்லை 

மேடு பள்ளம் நிறைந்த நாடு  - இது 
காலன்கலை உடுத்தியா சுடுகாடு 
குழி வெட்டும் கூடயிருந்தே 
பழி சொல்லும் பாதங்கடந்தே
வேண்டும் எச்சரிக்கை -  அல்லேல்
எரிந்து சாம்பலாகும்  வாழ்க்கை

நீ உயர்ந்து நின்றால் 
உடன் வரும் 
உன்னோடு 
இருக்க அல்ல 
உள்ளதை எடுக்க - நீ 
தாழ்ந்துபோயின்  சாபம் தரும் 
தரணியிலில்லாமல்  உன்னை மாய்க்கும் 
வஞ்சகப்  புகழ்ச்சிக்கு 
வண்ணம்தீட்டி 
வக்கணையாய் எடுத்துரைப்பர் 
உன்போல் வள்ளல் உலகிலில்லை என
முகஸ்துதி - அது 
மிகப்பெரும் சதி
விழிப்புக்கொள் 
விருட்டென எழு
இல்லையேல் 
கன்னக்கோலால்  உந்தன்
கதை முடிப்பர் 

உன் கையே உனை உயர்த்தும்  
சோர்ந்து போயின்
உன் நிழலே விரட்டி  துரத்தும் !

   விழிப்புடன் 
    மு. .ஏழுமலை 
       9789913933

பதிவு : மு ஏழுமலை
நாள் : 20-Feb-19, 3:04 pm

மேலே