8 விழிப்பு கொள் விடியலை நோக்குபவனும் வீண் சோம்பலை...
8 விழிப்பு கொள்
விடியலை நோக்குபவனும்
வீண் சோம்பலை போக்குபவனுமே
வீறு கொண்டு எழுகின்றான்
அடலேறாய் முன்னேறி - ஆதவனையும்
எட்டி பிடிக்கின்றான்
உண்மை உழைப்புடையவன்
ஊரை ஏமாற்றுவதில்லை
ஊரை ஏமாற்றுபவனோ - ஒருபோதும்
உண்மையாய் உழைக்க நினைப்பதில்லை
மேடு பள்ளம் நிறைந்த நாடு - இது
காலன்கலை உடுத்தியா சுடுகாடு
குழி வெட்டும் கூடயிருந்தே
பழி சொல்லும் பாதங்கடந்தே
வேண்டும் எச்சரிக்கை - அல்லேல்
எரிந்து சாம்பலாகும் வாழ்க்கை
நீ உயர்ந்து நின்றால்
உடன் வரும்
உன்னோடு
இருக்க அல்ல
உள்ளதை எடுக்க - நீ
தாழ்ந்துபோயின் சாபம் தரும்
தரணியிலில்லாமல் உன்னை மாய்க்கும்
வஞ்சகப் புகழ்ச்சிக்கு
வண்ணம்தீட்டி
வக்கணையாய் எடுத்துரைப்பர்
உன்போல் வள்ளல் உலகிலில்லை என
முகஸ்துதி - அது
மிகப்பெரும் சதி
விழிப்புக்கொள்
விருட்டென எழு
இல்லையேல்
கன்னக்கோலால் உந்தன்
கதை முடிப்பர்
உன் கையே உனை உயர்த்தும்
சோர்ந்து போயின்
உன் நிழலே விரட்டி துரத்தும் !
விழிப்புடன்
மு. .ஏழுமலை
9789913933