21 . இயற்கை காப்போம் இயற்கை அன்னை காப்பாள்...
21. இயற்கை காப்போம்
இயற்கை அன்னை காப்பாள் உன்னை
நேசம் கொண்டிடு இயற்கையோடு
தேசம் வாழுமே இளமையோடு
காற்றே. . . காற்றே . .. பூங்காற்றே
காடுகள் தருமே உயிர்காற்றே
மூங்கிலில் நுழைந்தால் இசையாவாய்
மூக்கினிலே நுழைந்தால் உயிராவாய்
எங்கும் எதிலும் உன்னாட்சி - மனிதா
உன்னிலில்லை [யோ] மனசாட்சி
மலையுச்சியில் நீ பிறக்கின்றாய்
மண்ணின் மடியில் தவழ்கின்றாய்
மழையாய் நீயும் பொழிகின்றாய்
மக்கள் தாகம் தீர்க்கின்றாய்
நீரே நீரே இல்லையெனில் - நிஜமாய்
நாங்கள் அகதிகளே
இயற்கையில் இணைந்தால் இன்பந்தானே
செயற்கையில் வருவது துன்பம்தானே
நெகிழியால் உலகம் அழியுதடா
நினைவில் இதையும் நீ கொள்ளடா
வாடா வாடா காத்திடுவோம்
புதிதாய் பூமியை மாத்திடுவோம்!!
மு. ஏழுமலை
9789913933