எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

33. அவள் நினைவில் ஒத்தவார்த்தை சொல்லிப்புட்டா உசுருக்குள்ள நின்னுபுட்டா...

33. அவள் நினைவில் 

 ஒத்தவார்த்தை சொல்லிப்புட்டா
உசுருக்குள்ள நின்னுபுட்டா 
கண்ணால பேசிப்புட்டா - என்ன
கார்மேகத்துல பறக்கவிட்டா 
பட்டாம்பூச்சி பறக்குது 
என்  நெஞ்சுக்குள்ள  - பாவி மனம் 
மறந்துடுமோ அவ  சொன்ன சொல்ல 

ஆசைகள் அலைமோதுது 
மெல்ல மெல்ல  - என்மீசைக்கும்
மோகம் வருது - மேனி 
வருட மெல்ல மெல்ல 

கூர்விழியால் கார்குழலால் 
தேகம் தீண்ட - மேகம் 
உடைக்கும் மழையாய் 
காதல் தீண்ட
கடல்சூழியில் மூழ்கி 
நான் கரைசேர்கிறேன்  
கன்னியின் நினைவினிலே
நான் மறித்து எழுகிறேன் .
             மு. ஏழுமலை

பதிவு : மு ஏழுமலை
நாள் : 16-Mar-19, 10:31 am

மேலே