எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பங்கர் ராய் குறித்து பாலா எழுதிய கட்டுரையை வாசித்தேன்....

பங்கர் ராய் குறித்து பாலா எழுதிய கட்டுரையை வாசித்தேன். ஐந்து ஆண்டுகளாக வாசித்து வரும் வெண்முரசு இந்திய நிலத்தில் தங்களை உணர்ந்து துளித்துளியாய்த் திரட்டிக் கொண்டு பேரலைகளாக எழுந்து மானுடத்துக்கு மகத்தான பங்களிப்பை ஆற்றிய பல்வேறு மக்கள் திரள்களைப் பற்றிய உயிரோட்டமான சித்திரத்தை அளித்து வருகிறது. ஒரு நல்லரசு மக்களைப் பயிற்றுவிக்கும். மக்களுக்கு வாழ்க்கைக்கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் அரசே ஆள்வதற்கு குறைந்த பட்ச தகுதி கொண்டது. நம் நாட்டின் சாமானியர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை உருவாக்கும் தாழ்வுக்குச் சமமானது அவர்கள் கல்வியின்மை அவர்களை உணரச் செய்யும் துயர். ஓர் எளிய உபகரணத்தை அவர்கள் உருவாக்குவதன் மூலம் அவர்கள் அடையும் இன்பம் அவர்களை அறிவின் நம்பிக்கையின் ஒளியில் நிறுத்துகிறது. ‘’வெறும் பாதக் கல்லூரி’’ முறை நாடெங்கும் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு அமைப்புகளால்  முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும் மன எழுச்சியை உருவாக்கிய கட்டுரை.


நாள் : 18-Mar-19, 4:38 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே