எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது நிலைப்பாடு ------------------------------------ நாம் வாழ்வில் பல நிலைகளை...

  எனது நிலைப்பாடு
------------------------------------  


நாம் வாழ்வில் பல நிலைகளை கடந்து செல்கிறோம் . பலப்பல அனுபவங்களைப் பெற்று ​வளர்கிறோம். சிலவற்றை மட்டுமே நினைவில் வைத்துள்ளோம் , ஆனால் பல நிகழ்வுகளை மறந்து விடுகிறோம் . இது மனித இயல்பு மட்டுமல்ல , வயது முதிர்வும் காரணம் .ஒருசில நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கவும் தவறுவது இல்லை . அவ்வாறு நினைக்கையில் நமக்குள் பல்வேறு எண்ணங்கள் தோன்றும் . 

அன்று வேறுமாதிரி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ அல்லது நாம் தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைக்க தோன்றும் . நமக்கு வருத்தமும் மேலிடும் .சில நிகழ்வுகள் நமக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும் .ஆனால் அப்படியும் நாம் மாறி விட்டோமா எனில் நிச்சயம் இருக்காது . இப்படித்தான் அனைவரின் வாழ்க்கை நகருகிறது என்பதே உண்மை .

இனியாவது நம்மை முதலில் திருத்திக் கொள்வோம் பிறகு மற்றவரை திருத்துவோம் .​

இது அறிவுரை அல்ல , அனுபவத்தின் வெளிப்பாடு , எனது நிலைப்பாடு .​


பழனி குமார் 
30.03.2019  

நாள் : 30-Mar-19, 2:08 pm

மேலே