எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவுகள் காலத்தின் மாறுதலால் நவீனகாவிய உந்துதலால் மாற்றப்பட்ட இயற்கை!!!...

          நினைவுகள்  

  காலத்தின் மாறுதலால்
நவீனகாவிய உந்துதலால்
மாற்றப்பட்ட இயற்கை!!!
ஆசையால் விளைந்த ரோஜாசெடி
கண் விட்டு அகலா - அந்த 
முதல் துளிர் விட்ட தருணம்...
இலையின் உதிர்தலுக்கு கூட 
கண்ணீர் வேருக்கு தண்ணீராக 
மாற்றப்பட்ட சமயங்கள்
இதழ்களின் முப்பரிமாணத்தை மட்டுமே
ரசித்த கண்கள் ️
தேடுகிறது! பழைய செடியை
வேர் பதித்த இடத்தை!
மாரணைத்த தண்டை!
மடியணைத்தை பூவை!
நாசி நுகர்ந்த வாசத்தை!
அன்பு அணைத்த இதழ்களை!
எங்கும் காணவில்லை
முறையிட்டேன் இயற்கையிடம்🔊
பதிலோ! காலம் என கூற
ஓடினேன் காலத்திடம்
காலமோ சொன்னது!
வருட கால அளவில்
உன் மனமொத்த இதழ்கள் 
மங்கிவிட்டன! - நானோ!
பழைய இதழ்களை அடம்பிடிக்க 
மறுபடியும் சொன்னது காலம்
நக்கலாக!
போடா முட்டாள் என்று!
                 இவண்,
                        எம்.ஐ.டி கவி  

பதிவு : MIT Kavi
நாள் : 5-Jun-19, 6:08 pm

மேலே