ஊரை விட்டுப் போகிறேன்... அலுவலகம் கொடுத்த அவகாசம் முடிந்தது......
ஊரை விட்டுப் போகிறேன்...
அலுவலகம் கொடுத்த அவகாசம் முடிந்தது...
அலுத்துப்போன வாழ்வு மீண்டும் அழைத்தது...
விரல்விட்டு எண்ணிய விடுமுறை நாட்கள் விரைந்தோடியது..
கண்ணை விட்டு மறையும் பசுமையே உன்னை விட்டு போக முடியவில்லை...
ஊரை விட்டுப் போக மனமும் இல்லை...
என்னுடனே ரயிலேறி வந்துவிடு...
நீ இன்றி....
நீர் இன்றி....
என் நகரம் நரகமாய் போனதடி...