நீயும் நானும் சேரும் நேரம் இரவும் பகலும் மாறிப்...
நீயும் நானும் சேரும் நேரம்
இரவும் பகலும் மாறிப் போகும்...
நீயும் நானும் பிரியும் நேரம்
மனதின் இறுக்கம் கூடிப்போகும்...
விழிகள் வழியே பேசிக் கொள்ளும்
நிமிடங்கள் யாவும் கவிதைகள் ஆகும்...
பேசாத வார்த்தைகள் யாவும்
தமிழ் மொழியை இழந்து வாடும்...
இதழோடு கவிதைகள் ஊற
மனதோடு நீ அழகை சிரிப்பாய்...
சின்ன சின்ன சேட்டைகள் செய்ய
பொய்யை நீயும் கோபம் கொள்வாய்...
கடவுளிடம் பேசும் தருணம்
உன்னிடம் பேச உணர்ந்து கொள்வேன்...
விழியசைவில் ஆணைகள் போடு
உன்னோடு பணிவிடைகள் புரிவேன்...
என்றும் நீயும் நானும்
நானும் நீயும் மட்டுமே....