இந்த கரோனோ வைரஸ் இன்றுவரை உலகளவில் அனைவரையும் பேச...
இந்த கரோனோ வைரஸ் இன்றுவரை உலகளவில் அனைவரையும் பேச வைத்துவிட்டது. ஒன்றும் பேசாத நமது பிரதமர் மோடிஜி அவர்களே இன்று காணொளி மூலம் மக்களிடம் பேசிவிட்டார். அனைவருக்கும் புரியாத ஒரு மொழியில் பேசினாலும் , பின்பு அவரவர் மொழியின் மூலம் வந்த விளக்கங்களும் வேண்டுகோளும் அவசியமான ஒன்று .
அவரின் கவலையும் , நாட்டின் நிலையும் புரிகிறது . நாம் அதற்கேற்றாற் போல் நமது நலனுக்காகவும் பொதுநல நோக்கோடும் பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்றுக கருத்து இல்லை .
இணைவோம் , எதிர்கொள்வோம் , வெற்றியும் பெற்றிடுவோம்.
பழனி குமார்