கண்ணே மணியே கண்மணியே ... கண்ணீரும் கண்ணின் ஓரம்...
கண்ணே மணியே
கண்மணியே ...
கண்ணீரும் கண்ணின் ஓரம்
கசிந்தாலும் கண்ணின் ஈரம்
தீரவில்லை தந்த வலியும்
ஆறவில்லை காதல் காயம் ...
கண்ணே மணியே
கண்மணியே ...
ஒருநாள் உன்னைப் பார்த்தேன்
மறுநாள் பார்க்காமல் போனேன்
எண்ணி ஏங்கி மயக்கம் கொண்டேன்
பிழைத்திருந்தேன் .
கண்ணே மணியே
கண்மணியே ...
உயிர்வாழ நானும்
எனக்கு நீயும் வேணும்
உன் கண்ணின் வழி
கருணையே இல்லையோ..!