சிந்திப்பாய் நீ சில நிமிடம்......
சிரிப்பதற்கு கண்கள் பாேதாதா
உதடுகள் எதற்கு?
சிறு குழந்தையின் சிரிப்பில்
சிலிர்ப்படையவில்யைா நீ....
கண்களின் சிரிப்பு இதயத்தின்
இசை லயங்கள்
உதட்டின் சிரிப்பு உயிர்ப்பில்லா
ஓசையின் சந்தம்...
கவலைகள் என்ன கைக்குட்டைகளா
கைகளில் வைத்து பாதுகாப்பதற்கு...
காலங்கள் பாேடும் கை மருந்திற்காய்
ஏன் காத்திருக்க வேண்டும்...
கருங்கல்லின் உறுதி காெண்டு தகர்தெறிவாய் உன்
கவலைகளை...
நடப்பதற்கு கால்கள் எதற்கு
நம்பிக்கை பாேதாதா?
நட்பாய் கைகுலுக்க வேறுகைகள் எதற்கு?
தாெடர் முயற்சிகள் பாேதாதா?
வீழ்வதற்கு ஏன் வெட்கம்
விழுந்த விதைகள் தான்
நாளைய பெரு மரங்கள்..
பள்ளங்கள் நிறைந்த பாதைகள் தான் பாதங்களின் பலத்தைக் காட்டும்..
வெற்றியின் படிக்கட்டுக்கள்
உன் காலடியின்ஆரம்பத்தில் தான்
சாேர்வுகளுக்கு ஏன் நீ தாேள் காெடுக்கின்றாய்...
உன் தாேள்கள் மனவுறுதிக்காய் இருக்கட்டும்..
உன் தாேல்விகள் யாவும் உனை
சிற்பமாய் செதுக்கட்டும்..
வெற்றிகள் உனைச் சுற்றி
விண்மீன்களாய் ஔிரட்டும்..
சிந்திப்பாய் நீ சில நாெடிகள்
உன் கனவுகளிற்கு தடை
எதுவுமில்லை
உன்னைத் தவிர....
-மலர்விழி-