என்னவளே நான் நானாகவே இல்லை ஏன் அது எனோ...
என்னவளே
நான் நானாகவே இல்லை
ஏன் அது எனோ
ஒன்னும் புரியவே இல்லை
அடி பெண்ணே
எந்தன் மனதை நீ என்ன
செய்து போனாய்
போற போக்கில் என்னுள்
நீ போதை ஏற்றி போனயோ...?
நீ என்ன பெர்மூடாப் பெண்ணோ..!
உன்னை தாண்டி போகையில்
தொலைந்தேன்
விழிகள் இரண்டை இழந்தேன்
போகும் பாதை அனைத்தும் மறந்தேன்
காதல் வனத்தில் விழுந்தேன்
விழுந்த இடத்திலே
சேதமின்றி உனக்கே
என் மனதையும் கொடுத்தேன்
#இவன்_பர்ஹான்