கொரோனா அன்று விண்ணில் விளையாடிதோ விமானம் இன்று பறவையும்...
கொரோனா
அன்று விண்ணில்
விளையாடிதோ விமானம்
இன்று பறவையும்
பந்தாடுதே எந்நாளும்...
உலகமே கூட்டமாய்
ஊரடங்கில் அமர்ந்ததே
பறவையோ கூட்டம் கூட்டமாய் உலகெல்லாம் பறந்ததே...
அன்றெல்லாம் ஒலிஎழுப்பினால்
விழி திறந்தேன்
இன்று குயிலோசைகாக விழித்தெழுந்தேன்...
நெரிசலில் நேரம்
கடந்த சாலையும்
தரிசு நிலம்போல்
தனிமையானது மாலையும்...
ஓடிய மனித கால்களும்
ஓய்வெடுத்து ஓய்கிறதே
ஒதுங்கிய கால்நடைகளும்
ஓய்வின்றி ஓடிடுதே...
நச்சுப் புகையால்
மாசடைந்த உலகமே
நாளும் புன்னகையால்
காசும் மறந்ததே...
ஊழ்வினையால் இன்று
ஊரடங்கி இருக்கிறாய்
வினைப்பயனே நீயோ
இறையற்று இறக்கிறாய்...
இயற்கையை அழித்து
ஆயுதமாக்கிய மனிதா
இன்று இயற்கையே ஆயுதமாய்
உன்னை அழைப்பது தவறா...?