"ஆசையோடு உன் வரவை எண்ணி" முகம் அறியாமலும் முகவரி...
"ஆசையோடு உன் வரவை எண்ணி"
முகம் அறியாமலும்
முகவரி தெரியாமலும்..
கற்பனையில் என் காதல்...
"உன்னை பார்த்த கணம்
என்
அச்சம் மடம் நாணம்
அனைத்தும் மறந்து போவேனடா!"
"உனது கொஞ்சல் பார்வையில்
நான்
பேச்சிழந்து போவேனடா!"
"செல்ல தீண்டல்களில்
உன்னை
கெஞ்ச வைத்து மிஞ்ச தான்
வைப்பேனடா!
"என் அழகான முரடனே
உன் அதிகார மிரட்டலால் நான் மிரண்டுபோவேனடா!
"எனை அன்பாய்
காதலாய்
செல்லமாய்
காலமெல்லாம் ஆட்கொள்ள
எப்போது வருவாயடா!