உறங்கும் வேளையில் உழன்றவை ! ----------------------------------------------------------- உறங்கச் சென்றேன்...
உறங்கும் வேளையில் உழன்றவை !
-----------------------------------------------------------
உறங்கச் சென்றேன் ....விழிகளை மூடிய அடுத்த நொடியே உள்ளத்தின் கதவுகள் திறந்தன . இது இயல்பான ஒன்றுதான் . அனைவருக்கும் ஏற்படுகிற நிகழ்வுதான் . எண்ணங்கள் எட்டுத்திக்கும் ஓடியது .சில சற்று நெருடலாகவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்தது. சிதறிய சிந்தனைகளில் ஒரு சில பதராகவும் இருந்தது .
தற்போது நாட்டில் தான்எத்தனை பிரச்சினைகள் ...?எவ்வளவு குழப்பமான சூழல்கள் ?காற்றில் பறக்கும் பஞ்சாக , சமூகத்தில் திசையறியாமல் பறந்து திரியும்ஏழையின் ஏக்கம் நிறைந்த மூச்சுக் காற்று ,சோகத்துடன் ஒலிக்கும் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகள் !சாதிமத வெறியாட்டங்கள் , வாழ்வதற்கு இடமே இல்லாத நிலையிலும் இட ஒதுக்கீடு பற்றிய பிரச்சினைகள் , அரசியல் எனும் பெயரில் நிகழும் அவலங்கள் , தீர்க்கப்படாத நதிநீர் பங்கீடுகள் , கட்டி முடிக்கப்பட்ட அணைகளால் எழும் அச்சங்கள் ,கல்விக் கொள்கை மாற்றத்தால் விளையும் நன்மை தீமைகள் ,வரவு செலவு திட்டத்தால் ( பட்ஜெட் ) ஏற்படவுள்ள சாதக பாதகங்கள் , மேலும் அதன் அடிப்படையில் நிகழும் காரசார விவாதங்கள் , பல நோய்களின் தாக்கத்தால் அச்சமுடன் வாழும் சமுதாயம் !
இவையன்றி நாம் எதிர்கொள்ளவுள்ள தேர்தலின் முடிவு பற்றிய மனநிலை ! என பல்வேறு அம்சங்கள் கொண்ட சூழ்நிலை தான் தற்போது ....!
தீர்வு தான் என்ன , எப்போது ? விடை தெரியா வினா இது .
வாழ்ந்து முடிந்தவர்கள் இனி வாழப் போகும் அடுத்த தலைமுறைக்காக ...வாழும் சமூகம் நிம்மதியாக வாழ்ந்திட ,வளரும் தலைமுறையின் வருங்காலம் உறுதியாக , வளமாக, அமைதியாக, ஆனந்தமாக அமைந்திட அனைவரும்ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் !
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது !
பழனி குமார்
02.02.2021LikeCommentShare