அவ்வப்பொழுது சிலுர்த்து கொண்டு சென்றாலும் என் அரை ஓரமாய்...
அவ்வப்பொழுது
சிலுர்த்து கொண்டு
சென்றாலும்
என் அரை ஓரமாய்
நீ சிந்தும் கள்ள
புன்னகையில்
கோவம் கரைந்து
போகும்டி என் தோழியே..........
வீட்டின் கவலையை
எல்லாம் மறந்து விட
செய்யும் உன்
கேலிகளும் கிண்டல்களும்........
உடன் பிறந்தோர் இல்லை
என என் வருத்தம்
போக்கினாய்
என்னோடு இருந்த
சில வருடங்கள்............
பேருந்து பயணத்திலும் குறைக்கவில்லை
நம் துறுதுறு
பேச்சும் குறுகுறு
பார்வையும்...
அழகான ஆண்மகனை
எனக்கு அண்ணனாக்கி
அழகு பார்த்தாய்.....
உன் பையன் என்
பொண்ணுக்கு என்ற
பத்திர பதிவும்
நிகழ்ந்தது நமக்குள்....
இப்போதும்
தோன்றுகிறது மன
வலிகளின்
போது மறுபடியும்
கல்லூரியில் உன்
தோழியாகவே
வாழ்ந்துவிட வேண்டும்
என்று.......