அனிதாவின் குரலாக நீட் தேர்வை நோக்கி இராப்பகல் எனப்...
அனிதாவின் குரலாக நீட் தேர்வை நோக்கி
இராப்பகல் எனப் படித்தேன்
நல்ல மதிப்பெண் எடுத்தேன்
ஊரே என்னைச் சுற்றி நின்று வாழ்த்து சொன்னது
நீட் தேர்வே,
என் கனவு மருத்துவம்
என் கனவைக் கலைத்து விட்டாய்
என் அம்மாவின் ஒரே குழந்தையைக் கொன்று விட்டாய்
அன்றும் என்னை சுற்றி ஊரே நின்றது
அவர்களின் நடுவில் நான் பிணமாக
கனவு என்பது தூக்கம் கலையும் வரை தான் ஆனால் நீயோ,
என் கனவையும் கலைத்துவிட்டு என்னையும் ஒரேயடியாகத் தூங்க வைத்துவிட்டாய்.
இப்படிக்கு ,
Dr.அனிதா