எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உடல்நலக்குறைவில் எங்கள் அம்மா ,.. ____________ சி .எம்...

உடல்நலக்குறைவில் 
எங்கள்  அம்மா ,..
____________ சி .எம் .ஜேசு 


பெரியோர் யாவரும் 
ஒரு நிலையினரே என்றாலும் 
ஒவ்வொருவருக்கும் 
வெவ்வேறு குறைபாடுகள் உடலில் 

உலகளவில் எந்த குறைவுகளும் 
இல்லாத எங்கள் அம்மாவிற்க்கு  
மனக்குறைவும் உடல் உபாதைகளும் 
உருக்கி இருக்கி பிடித்து கொண்டது 

இரண்டு முறை வெளி நாட்டு 
புணித பயணம் மேற்கொண்டவர் 
மலேசியா / சிங்கப்பூரேன சென்று 
அன்பையும் ஆறுதலையும் ஈந்தவர் 

மார்பக புற்றுநோய் முற்றாநிலையில் 
முழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 
அன்றய நாள் முதற் இந்நாள் வரை 
பினேற்றம் இல்லாமலே வாழ்ந்தவர் 

இன்றய கால கட்டத்திலே 
புலம்பலும் புன்முறுவலுமாகி 
அழுகையும் ஆனந்தமும்மாகி 
வீட்டை சுற்றிய நினைவுகளால் -தன் 
நெஞ்சை இருக்கமாக்கிக்கொள்கிறார் 

இதயம் அதிர அதன் இயக்கம் 
என்றோ நின்று போனதாக ECG எனும் 
அறிக்கை காண்பிக்கிறது - அதனாலே  இத்தனைநாள் தொடர் உடல்நல குறைவால் அவதியுற்று வருகிறார் 

உழைப்புக்கும் உத்வேகத்திற்கும் 
சொந்தகாரர் எங்கள் அம்மா 
காடு கழனி மேடு வீடென விந்தை 
செயல்பல புரிந்தவர் - இன்றோ 

மூட்டு வலிகளோடு 
மருந்து மாத்திரைகளோடு 
சர்க்கரை பிரஷர் அழுத்தமென 
அனலிட்ட நீராய் கொதிக்கிறார் 

எங்கள் அன்னையின் சாதனைகள் 
உலகியலில் உருவாக்க பட வேண்டிய 
உண்ணத புத்தகமாகும் -தனைத்தானே  செதுக்கிக்கொண்ட  சிற்பி இவர் 

இன்றளவும் மூன்று குடும்பத்தை 
ஒன்றென இனைத்து மகிழ்பவர் 
புலரா பொழுதுகளாகி 
புன்முறவலற்ற நிலையாகினார் 

ஓட்டுபவர் மயங்கிய தேராய் 
வழிகாட்டுபவர் அற்ற தேடலாய் 
பல பிரச்னைகளுக்குள் நாங்கள் 
சிக்கினாலும் சீராக இயங்குகின்றோம்   

எதையும் தாங்கும் இதயமாகி 
இயக்கமாகிற போது 
இறைவனின் அருளால் 
நிறைவடைவோம் என்பது நிச்சயம்

நாள் : 19-May-22, 11:18 pm

மேலே