பலமான கிளைகளில் மட்டும் பறவைகள் வந்து அமர்ந்து செல்கின்றன...
பலமான கிளைகளில்
மட்டும்
பறவைகள் வந்து
அமர்ந்து செல்கின்றன
பறவைகள் அறியும்
இந்த கிளை தான்
பாரம் தாங்கும் என்று
கிளைகள் அறியும்
இந்த பறவை நீங்கிச்
செல்லுமென்று...!!!
இருப்பினும்
ஏதோ ஒரு பறவை
என்றோ ஒருநாள்
கிளையோடு கூடமைத்துக்
குடியேறுகின்றன...!!
அதற்காக
அந்த கிளைகள்
பறவைகளின் அசைவுகளுக்கெல்லாம்
தலையசைத்துக்
காத்திருக்கின்றன...!!