எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமைதியாக காட்சி தரும் அதிகாலைப் பொழுது... ஆழ் உறக்கத்தில்...

அமைதியாக காட்சி தரும்

அதிகாலைப் பொழுது...
ஆழ் உறக்கத்தில் உலகமே
ஆழ்ந்து இளைப்பாற
ஆடவனே உன் பெண்ணின் மனம்
ஆசையாக தவிக்கிறது அன்பிற்கு..‌
அடையாளம் இல்லா அன்பு தான்..
அவசியமானது பெண்ணவளுக்கு...
ஆசைக்காக ஏங்கவில்லை ஆதரவிற்காக தவிக்கிறாள்...
அன்பு கொண்ட உன் நெஞ்சில்
அழுத்தமாக முகம் புதைத்திட்டால்
அனைத்தையும் எதிர் நீச்சலோடு
அழகாக கடந்திடுவாள்...
அன்பாய் அவளை அணைத்திடு
அன்பால் அவளை மீட்டிடு
        
                இப்படிக்கு,
பெண்ணவளின் இதயம்

பதிவு : Jeba
நாள் : 18-Sep-22, 8:04 pm

மேலே