யாரோவாக அறிமுகமாகி, யாவரையும் பின் தள்ளி, யாதுமாகி நிலைத்து...
யாரோவாக அறிமுகமாகி,
யாவரையும் பின் தள்ளி,
யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில்...!
அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்..!!!
காலையில் கதிரவனாகவும், மாலையில் தென்றலாகவும்,
பகலில் நிழலாகவும்,
இரவில் நிலவாகவும்,
கோடையில் மழையாகவும்,
குளிரில் தணலாகவும்,
காற்றில் மொழியாகவும்,
கவிதையில் வரியாகவும்
காத்திருக்கிறேன்
உன் கண் அசைவிற்காக 😉😉
காதலுடன்
உன்னை விரும்பி💙