அப்புவின் சந்தேகம் தொடர்கிறது ... அப்புவின் பரீட்சைகள் முடிந்து,...
அப்புவின் சந்தேகம் தொடர்கிறது ...
அப்புவின் பரீட்சைகள் முடிந்து, மதிப்பெண்கள் வெளிவரும் நாள்.
அன்று பள்ளிக்கு வந்திருந்தாள் அவன் தாய்.
பள்ளியிலிருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு கையில் மதிப்பெண் அட்டையை உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்து, "அம்மா அம்மா எனக்கு 22வது ரேங்க்" என்று சொல்ல, தாய் அவனிடம் "உன்னுடைய தோழன் பப்புவுக்கு" என்று கேட்க, "பப்புவுக்கு வெறும் 8 தான்" என்று சொன்னான். "அப்போ பப்பு தான் நல்ல மார்க் வாங்கிருக்கான்" என்று சொல்ல, அப்பு, "அது எப்படியம்மா .. 8 பெரிசா 22 பெருசா" என்று கேட்டான். தாய்,
"வீட்டுக்கு வா .. அப்பறமா சொல்றேன்" ன்னு அவனை அழைத்துக்கொண்டு, காத்திருக்கும் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.