தகுதி அற்றவர்கள் மட்டுமே.. பிறர் தகுதியை குறைசொல்லுவார்கள்..! முயற்சி...
தகுதி அற்றவர்கள் மட்டுமே..
பிறர் தகுதியை
குறைசொல்லுவார்கள்..!
முயற்சி இல்லாதவர்களே ..
பிறர் வெற்றியில் அதிகம்
பொறாமை கொள்ளுவார்கள்..!
பொய் வேடம் தரித்தோர்களே
என்றும் முகம்பார்க்க சிரித்து
முதுகுக்கு பின் புறங்கூறுவார்கள்..!
நன்மைகள் விளைக்குமிடம்
தீயவற்கு அஞ்சிடல்..
மானிடற்கு அழகில்லை..!
நாம் தெளிந்தநல் எண்ணத்தில்
செவ்வழிநடக்க வழியில் காணும்
பதர்களை மதியால் மிதித்து நடப்போம்..!
..கவிபாரதி..