எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிலருக்கு இழப்பை அறிந்தும் தேடும் ஆசை..! பலருக்கு இறப்பை...

சிலருக்கு இழப்பை அறிந்தும்
தேடும் ஆசை..!
பலருக்கு இறப்பை அறிந்தும்
வாழும் ஆசை..!
நமக்குள்ளோ முடிவு தூரமில்லை
என அறிந்ததும்
வாழவைக்கும்
ஆசை தான் வந்திடுமா??
வரவில்லை என்றால்
மானிடனே.....
உன்னை சுமக்கும் மண்ணும்
வருந்துமடா நீ பயனற்ற
பாவி என்று..!
மரணம் வரும் நாளில் வரட்டும்
மரிக்கும்முன் மண் போற்ற
உயிர் காத்து வாழ்வோம்.!!

..கவிபாரதி..

பதிவு : கவிபாரதி
நாள் : 28-Jul-14, 12:41 am

மேலே