மனசாட்சி உறுத்த வில்லையா ?

வணக்கம் எழுத்தே !

மனசாட்சி மிகவும் வருத்திய காரணத்தால் என்ன செய்ய வேண்டுமென தெரியாது திகைத்து இந்தக் கேள்வியைத் தொடுக்கிறேன். தமிழ் தாய் வாழ்த்தோ? அல்லது தேசியக் கீதமோ நமது காதுகளில் ஒலித்தால் நாம் அனைவரும் என்ன செய்வோம்? நாம் நம்மை மறந்து மதித்து அசையாது நின்றிடுவோம். அப்படி இருக்கையில் அவ்வாழ்த்துக்கு நாம் அனைவரும் நிற்கையிலே தமக்கொன்றும் சம்பந்தமே இல்லாதுவாறு தானுண்டு தன்வேலை உண்டு என்று நிற்காமல் நடந்து செல்பவர்களைக் கண்டால் என்ன செய்வீர்கள்.....ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்போம் என்று தெரியும்....அவர்களை என்ன செய்யலாம்....நான் இருக்கும் இடத்தில தினந்தோறும் இந்தப் பிரச்சனை இருக்கிறது தீர்திடத் தீர்வு சொல்லுங்கள் நல்லவர்களே !

எனது மனதில் உள்ள ஆதங்கம் அதனையும் கொட்டித் தீர்த்துவிட்டேன் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிப்பீர் நல்லுள்ளங்களே !



கேட்டவர் : விவேக்பாரதி
நாள் : 13-Nov-14, 10:22 pm
0


மேலே