காட்சிக்கு யார் பொருத்தம்

அப்பா: டேய் வண்டிய எடுத்து ஓட்ரயில்ல ஒருநாளாவது துடைச்சு வச்சுருகியாடா
ஹீரோ: தாத்தா சாகும்போது நீ அவரு சைகிள ஒருதடவை கூட துடச்சதில்லைன்னு சொல்லிட்டுதான் செத்தார் ..
என்று சொல்லிவிட்டு தான் ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணை பார்க்க ஓடியே செல்கிறான் அவள் வரும் நேரம் பார்த்து தன முகம் பார்க்க அருகே இருக்கும் வண்டியின் கண்ணாடியை கர்சீப்பால் துடைக்கிறான் சரியாக அதே நேரம் காதலி வர சமாளிப்பதற்காக வண்டி முழுவதும் துடைக்கிறான் .. காதலி பின்னால் வந்த ஒருவன் துடைததற்க்கு பணம் தந்து விட்டு காதலியையும் ஏற்றிக்கொண்டு போகிறான் பின்னால் தோளைதொட்டு திருப்புகிறார் அப்பா
அப்பா: உன் அப்பன் சைக்கிள துடைகிளைனாலும் இப்படி கேவல பட்டது இல்லை ..
என்று சொல்லிவிட்டு போகிறார் ஹீரோ அசடு வழிய நிற்கிறான்
இந்த காட்சியில் வரும் கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகர்கள் யார் என்று தேர்வு சொல்லுங்கள் ரசிக்கலாம்



கேட்டவர் : சுதந்திரம்
நாள் : 17-Jun-13, 12:35 pm
0


மேலே