முனைவர் பபுஷ்பாகிருஷ்ணன் - பாடலாசிரியர்

(Tamil Nool / Book Vimarsanam)

முனைவர் பபுஷ்பாகிருஷ்ணன் - பாடலாசிரியர் விமர்சனம். Tamil Books Review
முனைவர் ப.புஷ்பாகிருஷ்ணன் - பாடலாசிரியர்

1. ப.புஷ்பாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு

பாரதத்தின் தென்கோடியில் “தெய்வத்தின் சொந்த நாடு” என அழைக்கப்படும் கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் கரமனை எனும் இடத்தில் 1953-இல் டிசம்பர் திங்கள் 8–ஆம் நாளில் திருமிகு பி.பத்பநாப ஐயர் அவர்களுக்கும் திருமதி வி.பி.பாக்கிய லட்சுமி அவர்களுக்கும் புஷ்பா அவர்கள் மகளாகப் பிறந்தார். தவபூமி என்றழைக்கப்படும் இதே கரமனையில் சிறந்த வாக்கேயக்காரர் என அழைக்கப்படும் நீலகண்ட சிவன் தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்ததோடு அநேக தமிழ் கீர்த்தனைகளைத் தான் வணங்கும் தேவியின் மேல் எழுதியுள்ளார்.
இவரது தாயார் ஒரு பாடகராய் இருந்தார். குடும்பப் பின்னணியும் இசையைச் சார்ந்தே இருந்து வந்ததால் சிறு வயதில் இருந்தே இசையால் ஈர்க்கப்பட்டார். தானே பாடல்களை இயற்றிப் பண்ணமைத்துப் பாடும் திறன் இவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அவர்தம் காலத்தில் இருந்த பல்வேறு இசைப் பாடகர்களின் நிகழ்ச்சிகளையும் அடிக்கடி கேட்டதினால் தம் இசை அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டார். இவர் தனது எட்டாவது வயதில், காரைக்குடியில் முதல் மேடைக் கச்சேரியை வழங்கினார். இவர் கருநாடக இசைப் புலமை வாய்ந்தவர். திருவனந்தபுரத்தில் கருநாடக இசையில் பக்திப்பாடல்களை பாடுவதில் புகழ்பெற்று விளங்குபவர்களில் இவரும் ஒருவர். இவர் பலருக்கு முன்னோடியாக விளங்குபவர். இவர் ஒரு சிறந்த பாடகரும் பாடலாசிரியரும் ஆவார்.
இவா் சிறந்த பத்திரிக்கையாளராக இருந்தவரும் திருவிதாங்கூர் மகாராஜாவின் படைப்பு, நவீன மைசூர், தசரா விழா முதலியவற்றை விமர்சித்தவருமான மறைந்த திருமிகு ஆ.பத்பநாப ஐயர் அவர்களின் பேத்தி ஆவார். இதன் காரணமாக, பல முக்கிய பிரமூகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் தொடர்பு அதிகமாக இருந்தது. இச்சூழல்கள் தானாகவே புஷ்பாகிருஷ்ணன் அவர்களுக்கு இசை ஞானத்தை எளிதில் வந்தடையச் செய்தது. இத்தோடு தொடர்ந்து கரமனை அக்கிரகாரத்தில் நிகழும் இசைக் கலைஞர்களின் பாட்டுக் கச்சேரிகள் மற்றும் பல நிகழ்வுகள் இவருக்கு இசையின் மேலிருந்த ஆர்வத்தை தூண்டுவதாகவே அமைந்திருந்தது.
இவருடைய மூத்த சகோதரி, மறைந்த திருமதி மீனாட்சி சுப்ரமணியம் அவர்கள் பிரபல பாடகரும் ஸ்வாதி திருநாள் இசைக் கல்லூரி மற்றும் RLV இசைக் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பின்பு இவர் பாலக்காடு செம்பை இசைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவரது சிறுவயதில் இருந்தே இவரின் தாயாரால் கருநாடக இசை அறிமுகப்படுத்தப்பட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பள்ளிப்படிப்பை தொடர்ந்து திருவனந்தபுரம் HH மஹாராஜா கல்லூரியில் இசைத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். இதில் அவர் முதலிடத்தில் வெற்றி பெற்றார். மேலும் இவர் சிறந்த வீணை நிபுணருமாவார்.
இவர்தம் முனைவர் பட்டத்தைப் புகழ்பெற்றவரும், இசை அறிஞருமான சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் எஸ் சீதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் "ஸ்வாதி திருநாள் மகா இராஜாவின் இசையின் பங்களிப்பு" என்ற தலைப்பில் பெற்றுள்ளார்.
இவரது கணவர் திருமிகு எஸ்.கிருஷ்ணன் ஐயர். இவர் திருவனந்தபுரம் ISRO –இல் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். முனைவர் ப.புஷ்பாகிருஷ்ணன் அவர்களின் தாய் மொழி தமிழ் மொழியாக இருப்பினும் கேரளத்தில் பிறந்து வளர்ந்ததால் மலையாள மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
கல்வித்தளத்தில் பொறுப்புகள்
புஷ்பாகிருஷ்ணன் 1980-ஆம் ஆண்டில் அரசு சேவையில் முதல் முதலாக, பாலக்காட்டில் உள்ள சித்தூர் அரசு கல்லூரியின் இசைத்துறையில் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பாக திருவனந்தபுரம் SST COLLEGE OF MUSIC கல்லூரியில் பணியாற்றினார். இறுதியாக கேரளப் பல்கலைக்கழகத்தின் MAHARAJA’S COLLEGE FOR WOMEN – இசைத் துறையில் 2003 முதல் 2015 வரை 12 ஆண்டுகள் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிப்புரிந்து ஓய்வு பெற்றார்.
இவர் இசைத்துறையின் பல்துறை வித்தகர். அதாவது Musician, Musicologist, Veena Vidushi, Composer, Chittasvarams Composer. இவர் (மொத்தம் நூற்றைம்பதிற்கும் அதிகமான) தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், பாபநாச சிவன், நீலகண்ட சிவன், தமிழ் மலையாளம் தெலுங்கு சமஸ்கிரத கீர்த்தனைகளுக்கு சிட்ட சுரங்களை இயற்றினார்.
கச்சேரிகளில் பங்கு
திருநெல்வேலி, இராஜாக்கமங்கலம், களக்காடு, திருப்பரங்குன்றம், குளித்துறை, சென்னை, திருப்பதி, திருவாரூர் மற்றும் கேரளத்தில் பல்வேறு இடங்களில் நடந்த கச்சேரிகளில் தன் இசைப்புலமையைப் பகிர்ந்துள்ளார்.
இவர் பெற்ற விருதுகள்
1. திருவிதாங்கூர் சுவாதி படைப்புகளின் விருது – 1985.
இவ்விருதும் பணத்தொகையும் மிகவும் மதிப்பிற்குரிய கார்த்திகை திருநாள் தம்பிராட்டியால் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
2. செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவு விருது– 1998.
இவ்விருது திருவனந்தபுரம் செம்பை அறக் கட்டளையால் அளிக்கப்பட்டது.
3. ஸ்ரீ சுவாதி சித்திரா புரஸ்காரம் விருது – 2005.
சிறந்த பெண் இசைக்கலைஞர் என விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
4. ஸ்ரீ சாரதாதேவி நினைவு விருது – 2007
இவ்விருது சிறந்த சங்கீத சேவைக்கு சென்னையில் இருந்து வழங்கப்பட்டது.
5. கேரள சங்கீத ஆச்சாரியா விருது – 2013
இவ்விருது சிறப்பாக அநேகருக்கு சங்கீதத்தை படித்துக் கொடுப்பதோடு பிரபலப்படுத்துவதற்காகவும் திருவனந்த புரத்தில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
6. சுவாதி திருநாள் 200–வது பிறந்த நாள் விருது - 2014
இவ்விருது சுவாதியின் கீர்த்தனைகளை பிரபலப் படுத்தியதற்காக திருவனந்தபுரத்தில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பிருகத் சங்கீத கேந்திரம்
1988– ஆம் ஆண்டு இவரால் நிறுவப்பட்ட “பிரகத் சங்கீத கேந்திரம்” ஒர் இசை பயிற்சி மையமாகும். இங்கு ஐந்து வயது முதலாக வயது வரம்பின்றி இருபாலரும் இசை பயின்று வருகின்றனர். இதில் சாதாரண மக்களுக்கு முன் உரிமை அளிக்கப்படுகிறது. இங்கு கருநாடக சங்கீதம், வாய்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம் கற்றுத்தரப்படுகிறது. மற்றும் skype இன் உதவியினால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மக்களுக்கு கருநாடக இசையை இப்பொழுதும் பயிற்றுவிக்கிறார்.
பிருகத் சங்கீத கேந்திரம் சாஸ்த்ரீய சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிற்கின்ற ஒரு பாடசாலையாகும். மட்டுமல்லாமல் இங்கு ஐந்து வருடம் படித்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அட்மிஷன் விஜயதசமி நாளிலும், ஏப்ரல், மே மாதங்களிலும் நடைபெறுகிறது. மேலும் விடுமுறைகால பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த சங்கீத கேந்திரம் மாதந்தோறும், ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. ஆண்டுவிழாவில் திறப்புவிழா நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. பிருகத் சங்கீத விழாவிற்கு நிகழ்ச்சிகள் கேரளம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்றவர்கள் பங்கு பெறுகின்றனர். பிருகத் சங்கீத கேந்திரத்தில் நடத்தப்படும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.
குருகுல ரீதியில் சங்கீதம் பயிற்சி அளிக்கப்படுவதும் நிகழ்ச்சிகளில் உட்படுத்துவதும் இந்த பாடசாலையின் ஒரு முக்கியத்துவம் ஆகும்.
இப் பிருகத் சங்கீத கேந்திரம் திருவனந்தபுரத்திலுள்ள மணக்காட்டில் 2-ஆம் புத்தன் தெருவில் அமைந்துள்ளது.



2. ப.புஷ்பாகிருஷ்ணனின் படைப்புகள்
புஷ்பாகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளாவன,
1. மியுசிக் குவிஸ் - 501 கேள்வியும் பதிலும்
2. சங்கீத மார்க்கதர்சி (தொடக்கநிலை
மாணவர்களுக்காக )
3. சப்தவர்ண கிருதிகள் - ஏழு வர்ணங்களும் ஒரு
கிருதிகளும்
4. சட்திரிம்சத் கிருதிகள்
5. நவகிரக கிருதிகள்
6. லால்குடி பஞ்ச ரத்தினம்
7. ஆண்டாள் திருப்பாவை கிருதிகள் (மலையாளம்)
8. குறுந்தகடுகள்
1. மியுசிக் குவிஸ்
ப.புஷ்பாகிருஷ்ணன் எழுதியுள்ள மியுசிக் குவிஸ் என்னும் நூல் 2007-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள துசரா ஆப்செட் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. பொதுவாக எல்லா துறைசார் பகுப்புகளுக்கும் வினா-விடை தொகுப்பு புத்தகம் காண்பது எளிது. ஆனால் அதேபோல் இசை தொடர்பான கருத்துடைய பகுப்புகளுக்கு வினாவிடை புத்தகம் கிடைப்பதென்பது மிக அரிது என இப்புத்தகத்தின் முகவுரையில் ப.புஷ்பா கிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எனவே இக்குறை தீர்க்க எழுதப்பட்ட இப்புத்தகத்தில் மொத்தம் 501 வினாவிடைகள் தரப்பட்டுள்ளன. இதில் வாத்தியங்கள், இராகம், தாளம், சங்கீத ரூபங்கள், நாடோடி கானம் போன்றவைகளின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகம் சங்கீதம் படிக்கும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் சங்கீதத்தை நேசிக்கிறவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சான்றாக இப்புத்தகத்தில் இடம்பெறும் கேள்விகளுள் உதாரணமாக சில:
• கோபால கிருஷ்ண பாரதியின் முத்திரை ஏது?(வி.எண். 193)
 கோபல கிருஷ்ண, பாலகிருஷ்ண
• சுவாதி திருநாள் மகாராஜா யாருக்கு யானையின் தந்தத்திலான வயலினைப் பரிசாகக் கொடுத்தார்? (வி. எண்: 234)
 வடிவேலு
• தமிழ் சங்கீத்தில் சங்கராபரணத்தின் பெயர் என்ன?(வி.எண். 434)
 பழம் பஞ்சுரம்
• சங்கீதத்தில் மிகவும் வயது குறைந்த வாக்கேயக்காரர் யார்? (வி. எண்: 34)
 திருஞான சம்பந்தர். தனது மூன்றாம் வயதில் ‘தோடுடைய செவியன்....’ என்ற தேவாரப் பாடலைப் பாடினார்.


• தேவாரம் எழுதிய முக்கிய மகான்மார்கள் யாரெல்லாம்? (வி. எண்: 33)
 அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர்
• சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்? (வி. எண்: 24)
 இளங்கோவடிகள்
• திருப்பாவையை எழுதியவர் யார்? (வி. எண்: 36)
 ஆண்டாள்
• அமரசேனபிரிய என்ற இராகம் கண்டுபிடித்தது யார்? (வி. எண்: 48)
 இலட்சுமண பிள்ளை
• தமிழில் பிரசித்தி பெற்ற சரித்திரம் ஏது? (வி.எண்: 57) கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம்

• முகவீணை என்றால் என்ன? (வி. எண்: 105)
 மிகவும் மென்மையானதும் கவர்ச்சியானதுமான ஓசை எழுப்புகின்ற ஒரு துவாரமுள்ள இசைக்கருவியே முகவீணை.
• தேவாரம் என்றால் என்ன? (வி. எண்:208)
 திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், அப்பர் இவர்கள் மூவரும் சேர்ந்து எழுதிய திராவிட மொழியில் ஒரு புண்ணிய சங்கீதம் தான் தேவாரம். இதனை மூவர் தேவாரம் என்றும் கூறுவர்.
• அலாரிப் என்றால் என்ன? (வி. எண்: 216)
 அலாரிப் என்பது பரதநாட்டியத்தின் முதலாவது (ஒன்றாவது) வகை.
• சிலப்பதிகாரம் என்றால் என்ன? (வி. எண்: 228)
 சிலப்பதிகாரம் என்பது இளங்கோவடிகள் தமிழில் எழுதிய மிகமுக்கியமான காவியமாகும். இதில் நாட்டியத்தைக் குறித்தும், சங்கீதத்தை குறித்தும் மிக அதிகமாகக் கூறப்பட்டுள்ளன.
• தமிழில் புகழ் மிக்க நாட்டிய நாடகம் எது? (வி. எண் :277)
 நந்தனார் சரிதம் (கோபால கிருஷ்ணபாரதி)
• சந்தபாவல பெருமான் என்று கூறப்படும் மகான் யார்? (வி. எண்: 403)
 அருணகிரி நாதர்
என தமிழிசை தொடர்புடைய பல கேள்விகள் காணலாகின்றன.
2. சங்கீத மார்க்கதர்சி
'சங்கீத மார்க்கதர்சி' என்றால் சங்கீதத்திற்கு வழிகாட்டுதல் எனப் பொருள். இதில் சங்கீதம் என்றால் என்ன, ஏழு சுரங்களின் விளக்கங்கள், அவற்றின் பிறப்புகள், சப்தசுரங்கள், சுராவளிகள், மந்திரஸ்தாயி வரிசைகள், தாரஸ்தாயி வரிசைகள், சப்ததாள அலங்காரங்கள், கீதம், இலக்ஷண கீதங்கள், ஜதிசுரங்கள், சுவரஜதி போன்றவைகள் விளக்கப்பட்டுள்ளன.
3. சப்தவர்ண கிருதிகள்
இதன் முதற்பதிப்பு ஜூலை 2010--ஆம் ஆண்டில் வெளியானது. இதில் ஏழு வர்ணங்களும் ஏழு கிருதிகளும், அடங்கியுள்ளன. பொதுவாக வர்ணங்கள் மாத்திரமாகவோ, கிருதிகள் மாத்திரமாகவோ உள்ளடங்கிய புத்தகத்தை காணலாம். ஆனால் படிக்கின்றவர்களுக்கு பயன்படும் விதமாக வர்ணங்களின் இராகத்திற்கு இணையான கிருதியையும் உள்ளடக்கியது இப்புத்தகமாகும்.
எடுத்துக்காட்டாக,
நாட்ட இராகத்தில் ஆதிதாளத்தில் அமைந்த சரசிஜநாப எனும் பாலக்காடு பரமேசுவர பாகவதர் எழுதிய பாடலும் மைசூர் மகாராஜா எழுதிய இதே நாட்ட இராகத்தில் மைசூர் ஜயசாமராஜ வொடயால் எழுதிய ஸ்ரீமகாகணபதி பாடலும் ஒரே தலைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளன.
4. சட்திரிம்சத் கிருதிகள்
இப்புத்தகம் ஜூன் 2007 -ஆம் ஆண்டு முனைவர் புஷ்பா அவர்களால் துஷரா ஆப்செட் பிரிண்டர்ஸ் திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் மலையாள மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முகவுரையை ப.புஷ்பா அவர்களும், அணிந்துரையினை பாறசாலை பி. பொன்னம்மாள் அவர்களாலும் தரபட்டுள்ளது.
பாலக்காடு பொன்னம்மாள் அவர்களின் அணிந்துரை யிலிருந்து சிலவரிகள்,
கருநாடக சங்கீதத்தின் முக்கிய வாக்கேயகாரர்களாகிய தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீக்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்பவர்களின் காலம் சங்கீத்த்தின் பொற்காலமாகும். அவரைப்போல அவருடைய சமகாலத் தவர்களும், முன்காலத்தவரும் பின்காலத்தவரும் என பல உத்தம வாக்கேயக்காரன்மார்கள் சங்கீத லோகத்தில் தாராளம் இருந்திருக்கிறார்கள். அவர்களின் முக்கியமானவர்களின் சில கீர்த்தனைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
சங்கீதத்தின் பிதாவான புரந்தர தாசர் முதல் தற்காலத்து கோலப்பிள்ளை வரை ஏறத்தாள நான்கு காலகட்டங்களில் ஜீவித்த மகான்மார்களாகிய 22 வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன.
சுவாதி திருநாள் மகாராஜாவின் மூத்த சகோதரியான ருக்மணிபாய், சுவாதி திருநாள் மகாராஜா, இரைமான் தம்பி, குட்டிக்குஞ்சு தங்கச்சி, போன்ற கேரள வாக்கேயர்களும், அச்சுததாஸர், வேதநாயகம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி போன்ற தமிழ் வாக்கேயக்காரர்களும், இராமநாடு சீனிவாச ஐயர், பட்டணம் சுப்ரமணி ஐயர், கரப்பூரி வாசர், அன்னமாச்சாரியர் போன்ற தெலுங்கு வாக்கேயக்காரர்கள் மட்டுமல்லாது முற்காலத்தவர்களாகிய முத்தையா பாகவதர், ஜி.என். பாலசுப்ரமணியம் போன்றவர்களின் மகத்துவமான கீர்த்தனைகளும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் இடம் பெறும் கீர்த்தனைகள் லதாங்கி, தர்மவதி, கல்யாணி, மாயாமாளவகௌனள, போன்ற மேளகர்த்தா இராகங்களிலும் பல தாளங்களிலும் இடம் பெறும் கீர்த்தனைகள் அடங்கியுள்ளன. சாதி, மத பேதமின்றி எல்லாச் சமயப் பாடல்களும் அடங்கியுள்ளன.
இப்புத்தகத்தில் உள்ள கீர்த்தனைகளெல்லாம் இசையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இசைத்துறை மாணவர்களுக்கும், இசைத்துறை ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனுள்ளவைகளாக இருக்கும்.
இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கேயகாரர்கள்,
1.அச்சுததாஸர் (1850-1902)
2. தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் (1424 – 1503)
3. இரைமான் தம்பி
4. கே. என். கோபாலபிள்ளை
5. குட்டிகுஞ்ஞதங்கச்சி (1820-1904)
6. கர்ப்புரி கிருஷ்ணய்யர்
7. கோபாலகிருஷ்ண பாரதி
8. செய்யுர் செங்கல்வராய சாஸ்திரி (1810-1900)
9. ஜி. என் பாலசுப்ரமணியம் (1910- 1965)
10. திருப்பதி நாராயணசுவாமி
11. பட்டம் சுப்பிரமணிய அய்யர் (1844 – 1902)
12. பல்லவி கோபாலய்யர்
13. புரந்தர தாஸர்
14. பத்திராசல இராமதாஸர்
15. மஹாகவி குட்டமத்து
16. மார்க்கதர்சி சேஷங்கயர்
17. முத்தையா பாகவதர்
18. மைசூர் வாசுதேவாசாரியார்
19. இராமநாடு சீனிவாசய்யர்
20. ருக்மணிபாய் தம்புராட்டி
21. வேதநாயகம் பிள்ளை
22. சுவாதி திருநாள் மகாராஜா
மேலே குறிப்பிட்டுள்ள வாக்கேயகாரர்களைக் குறித்த முக்கிய விவரங்களும் அவர்தம் சிறந்த கிருதிகளும் நரம்படைவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழிசையில் பாடல் எழுதியுள்ளவர்களுள் வாக்கேயக்காரர்களாகத் தேர்ந்தெடுத்து இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவர்கள்:
1. அச்சுததாஸர்
2. கோபாலகிருஷ்ண பாரதி
3. செய்யுர் செங்கல்வராய சாஸ்திரி
4. வேதநாயகம் பிள்ளை ஆகியோர்.


5. நவகிரஹ கீர்த்தனைகள்
ஒன்பது நவகிரகங்கள் குறித்து மலையாளத்தில் எழுதப்பட்ட கிருதிகள் சுர சாகித்யம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.
இப்புத்தகம் 1991-இல் நெற்றியாற்றின்கரை பிரிஷா அச்சகத்தால் வெளியிடப்பட்டது. இது மலையாள மொழியில் எழுதப்பட்டதாகும். இதில் நவகிரகங்களான சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றின் முக்கியத்துவமும் இக்கிரகங்களுக்கு முத்துசுவாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட கிருதிகளுக்கு சுரசாகித்தியமும் முனைவர் புஷ்பாவால் அமைக்கப்பட்டுள்ளன.
6. லால்குடி பஞ்ச ரத்தினம்
இப்புத்தகத்திற்கு மற்றொரு பெயர் நாகஜோதி என பெயரிடக் காரணம் தியாகராஜ சவாமிகளின் மேன்மையைக் கருதி முனைவர் புஷ்பா அவர்களால் புனைந்த பெயராகும். இப்புத்தகம் ஆலுமூட்டில் உள்ள ஸ்ரீ அச்சகத்தால் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5 தியாகராஜ கீர்த்தனைகள் காணப்படுகின்றன. இப்புத்தகத்தில் லால்குடி பஞ்சுர கீர்த்தனைகளின் அர்த்தமும், சுரசாகித்யமும் மலையாளத்தில் உள்ளன.
திருச்சியின் அருகில் உள்ள லால்குடி என்ற இடத்தின் முக்கியத்துவத்தையும், 5 தெய்வங்களின் மகத்துவத்தையும் இக்கிருதிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
சிவனை துதிக்கும் ஐந்து மலையாளக் கிருதிகளுக்கு இராகம் கொடுத்துப் பாடப்பட்டுள்ளன.

7. ஆண்டாள் திருப்பாவை
ஆண்டாள் திருப்பாவை என்பது ஒவ்வொரு பாடலும் 8 வரிகளைக் கொண்டதாகும். இவற்றை இவர் மலையாளத்தில் மொழிபெயர்த்தது சிறப்பிற்குரியதாகும்.
ஜெயதேவ கவி என்பவர் தியாகராஜ சுவாமியின் காலத்திற்கு முற்பட்டவர். அவர் சமஸ்கிருத்த்தில் ‘கீதகோவிந்தம்’ என்ற பெயரில் கிருஷ்ண லீலைகளைப் பற்றி 24 கிருதிகள், ஒவ்வொன்றினுக்கும் எட்டு வரிகள் வீதம் படைத்துள்ளார். இதில் எட்டு வரிகள் உள்ளதால் ‘அஷ்டபதி’ என பெயர் வந்தது. (அஷ்டம் + பதி = எட்டு + வரிகள்). இந்திய இசையில் கருநாடக இசை, இந்துஸ்தானி இசை என்ற பிரிவுகள் ஏற்படுவதற்கு முன்பாகவே இசை அமைத்து பாடியவர் இவர். எனவே இந்த ‘அஷ்டபதி’ அமைப்பில் பாடப்பெற்ற பாடல்கள் பாரதம் முழுவதும் வழக்கத்திலுள்ளன. அதே வடிவமைப்பில் ஆண்டாள் திருப்பாவை இயற்றப்பட்டது. இது மார்கழி மாதம் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பாடல் வீதம் 30 நாட்களுத்கும் 8 வரிகளில் அமைந்தப் பாடல்கள் இன்றும் பெண்களால் பாடப்பட்டு வருகிறன. ஜெயதேவ கவிக்கு பின்பாக ‘அஷ்டபதி’ அமைப்பில் அமைந்த பாடல்கள் ஆண்டாள் அவர்களைத் தவிர வேறு யாராலும் பாடப்படவில்லை.
8. குறுந்தகடுகள்
1. மார்க்கதர்சி -2 குறுந்தகடுகள்
2. அஷ்டபதி மாதிரி - 10 கிருதிகள் (8 வரிகள்)
3. மியுசிகல் பாம்ஸ் ஆப் சப்த வாக்கேயக்காராஸ்
(Musicalforms of Saptha Vaggeyakaras)
இதில் குறிப்பிட்ட வாக்கேயக்காரர்களான சுவாதி திருநாள், ருக்மணி ரமணி, தியாகராஜா, கே.என். கோபால பிள்ளை, தீட்சதிர், சியாமா சாஸ்திரிகள் போன்றோர்களின் கிருதிகள் சுரப்படுத்தப்பட்டுப் பாடப்பட்டுள்ளன.
4. சுவாதி திருநாள் கிருதிகள் (12)
5. சிவ கிருதிகள்
6. சப்தவர்ண கிருதிகள் (14) – ஏழு இராகத்தில் ஏழு
வர்ணங்களும் கீர்த்தனைகளும்
7. சங்கீத திருமூர்த்திகளின் கீர்த்தனைகள்(13)
(அ) தியாகராச சுவாமிகள் -5
(ஆ) முத்துசுவாமி தீட்சிதர்-5
(இ) சியாமா சாஸ்திரிகள் -3

இயற்றியுள்ளப் பாடல்கள்
இவர் எழுதிப் பாடியுள்ள பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. இரண்டு கிருதிகள் தேவியையும், ஒரு கிருதி மதுரை மீனாட்சியம்மையையும் ஒரு கிருதி விநாயகரையும் போற்றிப்பாடுவதாக அமைந்துள்ளன. மற்றும் ஒரு கீதம் மாயமாளவகௌளா இராகத்தில் சரசுவதி தேவியை போற்றுவதாக அமைந்துள்ளது. மூகாம்பிகை தேவிக்கு மங்கள கீதம் இவரால் பாடப்பட்டுள்ளது.
1.மூகாம்பிகை தேவி மங்கள கீதம்
இராகம் – மத்தியமாவதி தாளம் – ஆதி (திசிர)
Raga: Madhyamavathi Tala: Tisra Adi
ஆரோகஹணம் -ஸ ரி ம ப நி ஸ் Arohana: s r m p n s
அவரோகஹணம்-ஸ் நி ப ம ரி ஸ Avarohana: s n p m r s

மூகாம்பிகே தேவி ஜகதாம்பிகே தேவி
Mookambike Devi jagadambike Devi

சகலாத்மிகே தேவி மூகாம்பிகே
Sakalathmike Devi mookambike

ஜகதாம்பிகே தேவி சர்வாத்மிகே தேவி
Jagadambike Devi sarvathmike devi

லோகாம்பிகே தேவி மூகாம்பிகே
Lokambike Devi mookambike

1. நாதாத்மிகே தேவி பிரமாத்மிகே தேவி
Nadathmike Devi brahmathmike Devi

ஜகதாம்பிகே தேவி மூகாம்பிகே
Jagadambike Devi mookambike

பிரணவாத்மிகே தேவி கானாத்மிகே தேவி
Pranavathmike Devi gaanathmike Devi

பரமாத்மிகே தேவி மூகாம்பிகே
Paramathmike Devi mookambike

2. ஹேமாம்பிகே தேவி பாலாம்பிகே தேவி
Hemambike Devi balambike Devi

ஞானாம்பிகே தேவி மூகாம்பிகே
Njanambike Devi mookambike


லோகாம்பிகே தேவி மூகாம்பிகே
Lokambike Devi vishwatmike Devi

ஜீவாத்மிகே தேவி மூகாம்பிகே
Jeevatmike Devi mookambike

3. வரதாம்பிகே தேவி லலிதாம்பிகே தேவி
Varadambike Devi lalithambike Devi

வித்தியாசுரூபிணி மூகாம்பிகே
Vidyaswaroopini mookambike

வித்துவுபிரகாசினி மோட்சபிரதாயினி
Vidyud prakashini moksha pradayini

ஆத்ம சுரூபிணி மூகாம்பிகே
Aatma swaroopini mookambike

2.சரஸ்வதி கீதம்
Raga: Mayamalavagaula Tala: Rupakam
Arohana: s r g m p d n s
Avarohana: s n d p m g r s
// ச,,, ச,ரி, க,ம, // ம,க, க,,, ரி,,, // ச,,ரி க,ரி, க,,, // க,ரி, க,ரி, ச,ச, //
Sri Sara swathi maam pa hi sa da ee sha pri ye


// ம,,, ம,ப, ப,,, // ப,,, பதநி, ,,நி, // த,,, த,நி, ,,ச, // நி,,, ச,ரி, சநித, //
Man tra na da ga na nri tha vee na va dya sam mo di tha
// ச,நி, த,ப, ம,க, // ப,ம, ப,த, ப,,, // ப,ம, க,ம, க,ரி, // க,ரி, ச,ரி, ச,,, //
Vara muni van ditha ki rthe ta va pa da padmam na ma sthe
6.ஜதிசுவரம்( Jatiswaram)
a. Raga: Hamsadhwani Tala: Tisra Eka

Arohana: s r g p n s
Avarohana: s n p g r s

Pallavi
// க , க க ,க ரி , ரி ரி , ரி // ரிரிரி ரிரிரி ச , ச ச , , // க , க க , க ப , ப ப , , //
// க , ப க கப க , ப நி , ப // ச , ச ச , ச ச , ச ச , , //
Charanaswaras
1. // ச ப , ச ப , ப நி நி ச , ச // ப நி நி ச , ச ப நி நி ச , ச // நி நி ச
நி நி ச நி ச ரி நி ச ரி //
// சச , நி நி , ப ப , க க , // நி நி ப நி நி ப கரி ரி ச , , // க ரி ரி ச , ,
க , ரி ரி ச , //
2. // ப ச , ச நி நி நி ச , , , , // ப ச , ச நி நி நி ரி , , , , // நி ரி , நிரி ,
நி ரிக , ரி , //
// ச , , , , , ச , , , , // ச நி , ச , , ச நி , ச , , // நி ப , ரி , , நி ரி , ச , , //
// ப ச , நி , , க ப , ச , , // ச , நி ப , க ரி , க ரி ச , //
3. Raga: Sivaranjani Tala: Tisra Eka
Arohana: s r g p d s
Avarohana: s d p g r s
Pallavi
// s s r g , g p , p d , d , // d , s d , p s d p g r s //
//சசரி க ,க ப ,ப த ,த , / த ,ச த ,ப சதப கரிச//
Charanaswaras
1. // s r g , g , g r r s , , // r g p , p , p g , g r , // g p d ,
d, d , p p g , //
//சரிக ,க , கரிரி ச , , // ரிகப ,ப ,பக ,கரி , / கபத ,
த, த ,ப பக //
// s s , d d , p p , g r s // (s s r)
// ச ச , த த , பப , கரிச // (சசரி)
2. // r , r r , r r g r s , , // d d s d d r d g r s , , // s r g r g p g p d p d s //
// s , , d , , p , , g r s // (s s r)
//ரிரி ரிரி ரிகரி ஸ /த்தஸ த்தரி /
தகரி ஸ //ஸரிக ரிகப கபத பதஸ / ஸ
தா / பா கரிஸ // (ஸஸரி)

3. // g , g g , g p , p p , p // p d p p d p g p g g p g // r g r r g r s r s d , , //
// d s r g p , p d p g r s // (s s r)
//கக கக பப பப / பதப பதப / கபக கபக /
ரிகரி ரிகரி ஸரிஸ த / தஸரி கப / பதப கரிஸ // (ஸ்ஸரி
4. // p , pp p , pp d , dd d , dd // s d , s d , d r , s , , // d g r g , g d r s r , r // d s d s , s s d p g r s // (s s r)
//பபப பபப ததத ததத ஸத
ஸ்த / தரிஸ / தகரி க்க தரிஸ ரிரி /
தஸ்த ஸ்ஸ் / ஸ்தப கரிஸ// (ஸ்ஸரி)
5. // d , d d , d s , s s , s // s r s s r s d s r s s , // s s r d d s p p d g g p //
//g , p d , d d p , g r s // (s s r)
//தத தத ஸ்ஸ ஸ்ஸ / ஸரிஸ ஸரிஸ/
தஸரி ஸ்ஸ / ஸ்ஸரி த்தஸ ப்பத க்கப/
கப தத / தப கரிஸ // (ஸஸரி)
6. // s , , d , , s , , s s , // d d s d d r d g r s , , // d s r g , g g r s r , r //
// r s d s , s d r r s s , // s,rs, d,pd, s,sd, p , , // p,ds d,pg p,dg p , , //
// g,pd s,r, g , , r , s // s r g p d s s d p g r s // (s s r)
/ஸ தா ஸ ஸ்ஸ / த்தஸ த்தரி / தஸரி
ஸ / தஸரி க்க கரிஸ ரிரி / ரிஸத ஸ்ஸ
தரிரி ஸ்ஸ //ஸரிஸ தபத ஸ்ஸத ப
பதஸ தபக பதக ப // கபத
ஸரி கரிஸ / ஸரிக பதஸ / ஸதப
கரிஸ // (ஸ்ஸரி)
7. Kritis
Raga: Hindolam Tala: Adi
Arohana: s g m d n s
Avarohana: s n d m g s
Pallavi
Sarva abheeshta dayike sri mookambike amba
Sarva charachara sthithe sarva veda sara maye amba
Anupallavi
Sarva shathru samharini sarva roga nivarini
Sarva loka samrakshini sarva soubhagya janani amba
Charana
Sakala kaladhara chinmayi sakala shakti swaroopini
Sakala sambath pradayini sakala vaibhava danamayi amba

b. Raga: Hamsadhwani Tala: Adi
Arohana: s r g p n s
Avarohana: s n p g r s
Pallavi
Gajanana om ganapathiye
Gana sevitha gajamukhane
Anupallavi
Gam ganapathiyum neeye
Gana vilolanum neeye
Charana
Ghana naya raga swaroopanum neeye
Ghana gambhira nadayudayone
Kachapi dumdubi vadya priyane
Kailasa pathiyin anpu mainthane

3. ப.புஷ்பாகிருஷ்ணனின் ஆராய்ச்சிப் பணிகள்
இசைத்துறையில் புஷ்பாகிருஷ்ணன் “சுவாதி திருநாள் மகாராஜாவின் இசையின் பங்கு”என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.
புஷ்பாகிருஷ்ணன் இதுவரை 23 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மேற்பார்வையாளராகவும், வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் இசைதுறைசார் ஆய்வுகளின் மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளார். அவற்றுள் தமிழிசை தொடர்பான ஆய்வுகளுள் சில,
1.மகாகவி பாரதியார் பாடல்களில் இசை
2.இராமநாடக கீர்த்தனை, நந்தனார் சரித்திர கீர்த்தனை
3.தென்னக இசை வரலாற்றில் யாழும் வீணையும்
4.நாலாயிர திவ்விய பிரபந்த இசை கூறுகள்
5.இசை வளர்ச்சியில் பாணர்களின் பங்கு
6.நாதஸ்வர மரபும் பல்வேறு பாணிகளும்
7.பண்களில் பாஷாங்க இராகங்கள்
8.தமிழ்நாட்டு தாலாட்டுப் பாடல்கள்
9. மனோதர்ம சங்கீதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
10. தாள்ளப்பாக்க அமைச்சாரியாரின் இசைத் தொண்டு
– ஓர் ஆய்வு
11. தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்

1.மகாகவி பாரதியார் பாடல்களின் இசை
இதில் இடம் பெறும் தலைப்புகள்: மகாகவி பாரதியார் காலத் தமிழக இசைச் சூழல், மகாகவி பாரதியார் பாடல்கள் – செவ்விசை வடிவங்களும் இசையமைதிகளும், மகாகவி பாரதியார் பாடல்கள் – நாட்டுப்புற வடிவங்களும் இசையமைதிகளும், திரையுலகில் பாரதியார் பாடல்களும் இசையமைதியும்.
2. இராமநாடக கீர்த்தனை – நந்தனார் சரித்திர கீர்த்தனை ஒப்பீட்டாய்வு
இதில் இடம் பெறும் தலைப்புகள்: இரு இசை நாடகக் கீர்த்தனை ஆசிரியரின் இசைப்பின்னணி, இராம நாடகக் கீர்த்தனை – இசை வடிவங்களும் இசையமைதியும், நற்றனார் சரித்திர கீர்த்தனை – இசை வடிவங்களும் இசையமைதியும், இரு இசை நாடகங்களின் இசை ஒப்பாய்வு.
3.தென்னக இசை வரலாற்றில் யாழும் வீணையும்
இதில் இடம் பெறும் தலைப்புகள்: இசைக்கருவிகளில் நரம்புக் கருவிகள், தென்னக இசை வரலாற்றில் யாழ், தென்னக இசை வரலாற்றில் வீணை, தென்னக இசை வரலாற்றில் யாழும் வீணையும்.
4. நாலாயிர திவ்வியப் பிரபந்த இசைக் கூறுகள்
இதில் இடம் பெறும் தலைப்புகள்: திவ்விய பிரபந்தம் தொடர்பான ஆய்வுச் செய்திகள், திவ்வியப் பிரபந்தத்தில் இசை பற்றிய அகச்சான்றுகள், திவ்வியப் பிரபந்த இசைப்பாடல் வகைகள், திவ்விய பிரபந்த இசைமரபு – அரையர் சேவை, திவ்விய பிரபந்த இசை – தற்காலம்.
5. இசை வளர்ச்சியில் பாணர்களின் பங்கு
இதில் இடம் பெறும் தலைப்புகள்: இசை வளர்ச்சியில் பாணர்கள், இலக்கியங்களில் பாணர், பாணர்களின் பண்பு நலன் – சமூக பொருளாதார அடிப்படையில், பாணர்களின் இசைத்திறன் – வாழ்க்கை முறை.
6. நாகசுர மரபும் பல்வேறு பாணிகளும்
இதில் இடம் பெறும் தலைப்புகள்: நாகசுர மரபும் பல்வேறு பாணிகளும் (தொல்காப்பியத்தில் வளியிசை, அகத்தெழு வளியிசை, புறத்தெழு வளியிசை), நாகசுர வாசிப்புமுறை, நாகசுரத்தில் இசைக்கப்படும் உருவகைகள், நாகசுர இசை பாணிகள்.
7. பண்களின் பாஷாங்க இராகங்கள்
இதில் இடம் பெறும் தலைப்புகள்: பண்களின் பாஷாங்க இராகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், பஞ்சமம் – வியாழக்குறிஞ்சி கௌசிகம், தக்கேசி – தக்கராகம் – செவ்வழி, மேகராகக் குறிஞ்சி – யாழ்முரி.
8.தமிழ்நாட்டு தாலாட்டுப் பாடல்கள்
இதில் இடம் பெறும் தலைப்புகள்: நாட்டுப்புறவியலும் பாடல்களின் தன்மைகளும், இலக்கியங்களில் தாலாட்டு, தாலாட்டுப் பாடல்களில் காணப்படும் இசை இலக்கண அணிகள், தாலாட்டுப் பாடல்களின் வகைகளும் இலக்கிய உத்திகளும், தாலாட்டுப் பாடல்களில் வட்டார வழக்குகளும் பாடுபொருள் தன்மைகளும்.


9. மனோதர்ம சங்கீதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
இதில் இடம் பெறும் தலைப்புகள்: இசையில் கற்பனையின் பங்கு, இசையில் மனோதர்ம்ம் குறித்த நூல் விளக்கம், பிற இசை முறையில் மனோதர்மம், தற்கால இசை அரங்குகளில் மனோதர்மத்தின் பங்கு, மனோதர்மத்தைப் பயிற்றுவிக்கும் முறைகள்.
10. தாள்ளபாக்க அன்னமாச்சாரியாரின் இசைத் தொண்டு – ஓர் ஆய்வு
இதில் இடம் பெறும் தலைப்புகள்: தள்ளபாக்க வாக்கேயக்கார பரம்பரை, ஸத்குரு ஸ்ரீ அன்னமாசாரியாரும் திருவேங்கடமுடையானும், ஸங்கீர்த்தனமும் ஸங்கீர்தனாச் சாரியாரும் – ஓர் ஆய்வு, ஸங்கீர்த்தன லக்ஷணமும், ஸ்ரீநிவாச சேவை கீர்த்தனைகள் – இயல் இசை பொருள் நயம் மொழி அமைப்பு இதர பாடல்களுடன் ஒப்பீடு, நாட்டியக் கிருதி மாலை.
11. தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்கள்
இதில் இடம் பெறும் தலைப்புகள்: இஸ்லாமிய சமயம் – ஓர் அறிமுகம், தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் தோற்றம் மற்றும் வரலாறு, தமிழக ஃபக்கீர்களும் இசையும், ஃபக்கீர்கள் பாடும் பாடல்களின் கரு மற்றும் இலக்கியக் கூறுகள், தமிழ் இலக்கியம் சுட்டும் பாணர்களும் தமிழக ஃபக்கீர்களும் – ஓர் ஒப்பாய்வு, தமிழக இஸ்லாமிய ஃபக்கீர்களின் இன்றைய நிலை.



ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஆய்வுகளாவன:
1. An Analytical study of the Compositions of Nilakanda Sivan and Papanasam Sivan in Melakartha Ragas.

2. Varka Ragas of South Indian Music

3. An Analytical Study on Laya applied in Various Aspects of South Indian Classical Music

4. Analytical Study of the Musical Compositions in Praise of Lord Ganapati.

5. Analytical Study of the Musical Compositions in Praise of Lord, Impact of Technology of Music.

6. Ravivarman Tampi and his Constibution to Karnatic Music.

7. The Musical forms in Neelambari Raga.

8. The role of Musical Compositions to Learn Ragalapana in South Indian Classical Music

9. Study of varnas in Dual forms (Music & Dance)

10. A Study of Tacur Singaracarya‘s Gayakalocanam (part I & II)

11. An Analytical Study of th Compostion of Thyagaraja and Muthuswami Diksitar in the Raga Sankarabharanam.
12. A Study of Sankrit Compostions on Lord Vishnu’s Avataras Composed by Famous Vaggeyekaras of Pretrinly and trinity period

13. Therapeutic Value of Vocal Music

14. Music in Temple Festivals and Rituals with special reference to Sri Srivani Temple at Tirumala.

15. Catholicity of Muthuswami Dikshither in praising gods and god heads in his various Compositions

16. A Study of Ghanaraga Keerthanas of Sri Tyagaraja Swami: mucial and literary content

17. An Analytical study on Bhashanga Ragas

18. Contributions of Kuttykunju Tankachy to Music

19. An Analltical study of the Melas and Janyas Comming under the Chakras VIII, IX, X, XI, of the 72 Sanpurna Melakartha Scheme.

20. The Deirative Angas figuring in the compositions of modern Composers

21. Contribution of Sangita Sahitya Kalanidhi Sriman Nallan Chakravartula Krishnama

22. A Critical Study of the evolution of musical forms in Classical Karnatic Music.

23. A study of Composition in praise of Goddess Saraswathi

24. The lyrical and Musical Excellence of Andhra Vaggeya Kara – s in port Tyagaraja Period with special reference to 20th century Andra Vaggeyakara

25. Role of Music and Instrument in Padayani

26. Theyyam – The Majestic Ritual of North Kerala.

27. An Analytical Study of the Shadava – Sampurna Ragas of Karnatic Music.
28. A Study of Ramamatya’s Svaramelakalanidhi.

29. Analytical Music with Special references to South Indian Classical Music.

30. The role of Varnanns in Voice training and Creativity - A Critical Study. By Meenakshi Subramaniam.

31. Psychometric Study of Ragas with reference to the Works of the trinity.

32. A Study on Allied Ragsas

33. Treatment of Madhyamawathi Ragas in the Composition of trinity.

34. An Analytical Study on Laya applied in various Aspects of south Indian classical music.














4. இயற்றமிழை இசைப்பாடலாக்கும் பணியின் பங்கு
புஷ்பாகிருஷ்ணன் அவர்கள் தன் காலத்துப் பாடகர்களின் பாடல்களை ஆராய்ந்து, பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இசையமைப்போனுக்குப் பாடலுக்கு சுர தாளம் அமைத்தல், பாடற்குப் பண் அமைத்தல், பண்ணின் அறிவும் தாளத்தின் அறிவும் இன்றியமையாதவை. பாடற்பொருளுக்கு ஏற்ற பண்ணைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இரக்கம், அன்பு, அருள், வீரம், காதல் முதலிய பண்புகட்கு ஏற்ற பண்களையும் தாளத்தின் பல்வேறு நடைகளையும் பயன்படுத்துதல் அழகும் ஊக்கமும் ஊட்டும்.

1.இலட்சுமி கிருஷ்ணா
இலட்சுமி கிருஷ்ணா என்பவர் திருவனந்தபுரம் சாலையைச் சேர்ந்தவர். இவர் கிருஷ்ண பக்தராய் இருந்தும் கணபதியின் மேல் கிருதிகள் எழுதியுள்ளார். இவர் தம் இரண்டாவது மகன் பெலவீனப்பட்டு சுகமில்லாமல் ஆனதினால், அக்காலக் கட்டத்தில் அநேக கிருதிகளை எழுதினார். அவற்றுள் நூறு கிருதிகள் வெளிவந்துள்ளன. இக்கிருதிகளை ஆய்வின் தலைப்பாக கொண்டு திருமதி. செல்வி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இப்பாடல்களுக்கு சிட்ட சுரங்கள் மற்றும் சுரப்படுத்தியும் உள்ளார்.
மேலும் தியாகராஜர் பாடல்கள், ஊத்துகாடு வெங்கட சுப்பையர், புரந்தர தாசர், முத்துசுவாமி தீட்சிதர் ,ஷயாமா சாஸ்திரி (முதல் முதலாக 1989 செய்யப்பட்டது- ஜனரஞ்சினி – நன்னுரோவ இராதா -தெலுங்கு),பாபநாச சிவன், நீலகண்ட சிவன் போன்றோர்களின் நூற்றுக்கும் அதிகமான பாடல்களுக்கு சிட்ட சுரங்கள் அமைத்துள்ளார். கீர்த்தனைகளில் சாகித்யம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அதில் சிட்ட சுரங்கள் சேர்க்க முடியாது. ஆனால் கிருதிகளில் சிட்ட சுரங்கள் மற்றும் சொற்கட்டுகள் சேர்க்கலாம்.
2.மலையாளக் கவிதைகள்
கேரளத்தில் புகழ்பெற்ற கவிஞர்களான குமாரனாசான், உள்ளுர் பரமேஷ்வரஐயர், வள்ளத்தோள், ஜி. சங்கர குறுப்பு, ஒ.என்.வி ஆகியோர்களின் கவிதைகளுக்கு இராகங்கள் இவரால் அமைக்கப் பெற்று பாடப்பட்டுள்ளன. ‘சர்வாவேதி’ என்பது திருவனந்தபுரத்தில் YMCA Hall- இல் 1985 முதல் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு நிகழ்வாகும். இதில் மேற்கூறிய கவிஞர்களின் கவிதைகளுக்கு மெட்டு அமைத்து முனைவர் புஷ்பா அவர்கள் 1985 முதல் 2012 வரை எல்லா வருடமும் பாடியுள்ளார்.
36 கிருதிகள் – அதில் 22 வாக்கேயக்காரர்களின் வாழ்க்கை வரலாறும் மற்றும் அவரால் இசை அமைக்கப் பட்டுள்ளவைகளையும் காணலாம். இப்பாடல்களுக்கு சுரம் மற்றும் சாகித்யம் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுரமும் சாகித்தியமும் உள்ளதால் எவராலும் பாடக்கூடியதாக அமைந்துள்ளன.
3.ஸ்ரீலளிதா தாஸர் கீர்த்தனைகள்
ஸ்ரீ லளிதாதாஸர் கீர்த்தனைகள் திரு T.G. கிருஷ்ண ஐயரால் பதுபிக்கப்பட்டது. 1945 செப்டம்பர் 14-ஆம் தேதி வெளியாயிற்று.
இந்த புத்தகத்தில் கிருஷ்ண அய்யர் 113 கிருதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் 16 கிருதிகளுக்கு சுர சாகித்தியம் இவரால் செய்யப்பட்டு மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு பாடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:
கீர்த்தனம் இராகம் தாளம்
அகிலாண்டேஸ்வரி ஹம்ஸாநந்தி ஆதி
அன்னையை நீலாம்பரி ஆதி
இனியாகிலும் ஸாவேரி ஆதி
உன் பெருமையை கல்யாணி ஆதி
எந்த பாக்ய ஸஹானா ரூபகம்
கணபதியே ஹம்ஸத்வனி ஆதி
கைலாவபதே சுபபந்துவராளி ஆதி
தக்ஷிணாமூர்த்தே சக்ரவாகம் ஜம்பை
தேவியை ஸீரடி ஆதி
ந்நாந்ந்தனா தேஸ் ஆதி
பக்துல ஆரபி ஆதி
பாடுபாடு காபி ஆதி
பாவனகுரு அம்ஸாநந்தி ஆதி
மாமவஸ்தா கமாஸ் ரூபகம்
ஸ்ரீகாஞ்சி தோடி ஆதி
ஸாமகான ஹம்ஸா நந்தி சாபு
4. மங்களம் கணபதி
மங்களம் கணபதி எழுதியவற்றுள் மொத்தம் உள்ள கிருதிகளில் 35 கிருதிகளுக்கு இவரால் சுர சாகித்யம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு படிப்பிக்கப் பட்டுள்ளன.
கீர்த்தனைகள் – பாகம் 1
1.குரு ஸ்துதி - இராகம் - மாயா மாளவ கௌளா
2.ஸப்த ஸ்வரலய -இராகம் – ஹம்ஸாநந்தி தாளம் – ஆதி
3.ஜன்னீ மாமவ -இராகம் – ஆரபி தாளம் – ஆதி
4. பாஹி பாஹி -இராகம் – தர்பாரி கனாடா தாளம் – ஆதி
5. குருவாயூரப்பா - இராகம் – காபி தாளம் – ஆதி
6. ஆனந்த தாண்டவா -இராகம் – காம்போதி தாளம் – ஆதி
7. கௌரி ஸூதம் -இராகம் – ஹம்ஸத்வனி தாளம் – ஆதி
இராகம் – ஹம்ஸத்வனி தாளம் – ஆதி
பல்லவி
கெளரி ஸூதம் ஸ்ரீகணேசம்
மௌளி தனயம் ஸ்மராம்யஹம் – கௌரி
அநுபல்லவி
ஆதார நிலயம் அங்குஸ வரதம்
ஆதி தேவம் வித்யா வஹிதம் - கௌரி
சரணம்
ஆகம ஸாஸ்த்ர ஞான பண்டிதா
ஆகம வேத புராண புருஷா
புண்ய மோக்ஷ க்ஷம ஸஞ்சிதா
புராதீஸ்வரா மங்கள மானஸா – கௌரி
கீர்த்தனைகள் – பாகம் 2
1.கணபதியே -இராகம் – ஹம்ஸாநந்தி தாளம் – ஆதி
2. ஜய ஜய கௌரி -இராகம் – ஆரபி தாளம் – ஆதி
3. நீலகண்டேன -இராகம் – ஹிந்தோளம் தாளம் – ஆதி
4. ப்ரமாம்யஹம் -இராகம் – பேகட தாளம் – ஆதி
5. மெத்த மனம் -இராகம் – நாத நாமக்ரிய தாளம் – ஆதி
6. முரளீரவலோலம் -இராகம் – ஸூரடி தாளம் – ரூபக
7. ஷண்முகப்ரிய -இராகம் – ஷண்முகப்ரியா தாளம் – ஆதி
8. ஸரஸிஜ நாப -இராகம் – சங்கராபரணம் தாளம் – ஆதி




இராகம் – ஹம்ஸாநந்தி தாளம் – ஆதி
பல்லவி
கணபதியே கருணை வள்ளலே
காத்தருள்வாய் எம்மை ஐங்கரனே (கணபதியே)
அனுபல்லவி
முக்கண்ணன் புதல்வனே மூலப்போருளே
முத்தமிழரசன் முருகன் ஸோதரனே (கணபதியே)
சரணம்
அம்மை அப்பனை வலம் வந்தாயே
அகிலமெல்லாம் அதில் அடங்க வைத்தாயே
துன்பங்கள் நீக்கிடும் துதிக்கையோனோயே
தூய உள்ளம் படைத்த மங்களம் தருபவனே.
கீர்த்தனைகள் – பாகம் – 3
1.வினாயகம் -இராகம் – மோஹனம் தாளம் – ஆதி
2.இன்னும் என்மேல் -இராகம் – ஸ்ரீரஞ்சினி தாளம் – ஆதி
3.நவராத்திரி -இராகம் – இராகமாலிகை தாளம் – ஆதி
4.ஆதாரம் நீதானம்மா -இராகம்–ஸிம்மேந்திர மத்யமம் தாளம் – ஆதி
5.சபரிகிரீஸம் -இராகம் – காம்போதி தாளம் – ஆதி
6.நீலமயில் - இராகம் – பெஹாக் தாளம் – ஆதி
7.பதமலர் பணிந்தேன் -இராகம் – கீரவாணி தாளம் - ஆதி
8.நாதப்ரும்ம - இராகம் மலயமாருதம் தாளம் – ஆதி
9.ஸதாமதுர -இராகம்–ஸிம்மேந்திர மத்யமம் தாளம் – ரூபகம்
கீர்த்தனைகள் – பாகம் – 4
1.வேல் வேல் -இராகம் – வராளி தாளம் – ஆதி
2.ஓங்காரப் பொருளாய் -இராகம்–ஷண்முகப்ரியா தாளம்– ஆதி
3.ஆயிரம் கைகள் -இராகம் – சுத்ததன்யாசி தாளம் – ஆதி
4.தேவி ஜகத் ஜனனி -இராகம்–பூர்வி கல்யாணிதாளம் – ருபகம்
4.முருகனுக்கொரு -இராகம் – மலயமாருதம் தாளம் – ஆதி
5.பாவயேஹம் இராகம் – மத்யமாவதி தாளம் – ரூபகம்
6.கௌஸ்துப தரா - இராகம் – ஹிந்தோளம் தாளம் – ஆதி
7.திருப்பதி மலைவாழ் -இராகம் – அடானா தாளம் – மி. சாபு
8.ஒப்பில்லா அப்பன் -இராகம் – பிலஹரி தாளம் – ஆதி
9.வராஹ அவதார -இராகம் – பைரவி தாளம் – ஆதி
10.சிவ வாம பாகேஸ்வரி -இராகம் பாகேஸ்வரி தாளம் – ஆதி
11.மலயமாருதம் -இராகம் – மலய மாருதம் தாளம் – ஆதி
12.துர்கே பகவதி -இராகம் – ஹேமவதி தாளம் – ஆதி
13.கொல்லூரில் -இராகம் – பிலஹரி தாளம் – ஆதி
கீர்த்தனைகள் – பாகம் – 5
1.கம் கணபதிம் -இராகம் – ஹம்ஸாநந்தி தாளம் – ஆதி
2.ஞான ப்ரதாயினி - இராகம் – கரஹரப்ரியா தாளம் – ரூபகம்
3.சக்தி வினாயகம் -இராகம் – கௌளை தாளம் – ஆதி
4.வஸந்த ராகம் -இராகம் – வஸந்தா தாளம் – ஆதி
5.ஸதாபாலய -இராகம் – ஸாவேரி தாளம் – ஆதி
6.துர்க்கா பரமேஸ்வரி -இராகம் – ஸரஸ்வதி தாளம் – ஆதி
7.வாரணாசி வஸிதம் -இராகம் – ரீதிகௌளை தாளம் – ஆதி
8.இரவும் பகலும் - இராகம் த்விஜா வந்தி தாளம்- ஆதி
5.மகாகவி கே.சி. கேசவ பிள்ளை
இவர் ஒரு வாக்கேயக்காரர். பல கோவில்களை தரிசித்து 10 பாடல்கள் வீதம் பாடி ஒரு குறுந்தகட்டை வெளியிட்டுள்ளார். மொத்தம் 85 கிருதிகள் பாடியுள்ளார். இவர் மேடையிலும் பாடக்கூடியவர். இவருடைய கிருதிகள் இரண்டு பகுப்புகளாக அமிர்தா தொலைக்காட்சியில் ‘சுருதிலயம்’ என்ற நிகழ்ச்சியில் புஷ்பாகிருஷ்ணன் அவர்களால் பாடப்பட்டுள்ளன. இவரது மகன் கே.என்.கோலப்பாபிள்ளை. இவரும் கிருதிகள் எழுதியுள்ளார்.
மகாகவி. கே. சி. கேசவபிள்ளையின் பாடல்களுக்கு சுரதாளம் அமைத்து இவரால் பாடப்பட்டுள்ளன.
1.அடிமலரிணதொழுதேன் -இராகம் – ஹிந்துஸ்தானி காபி தாளம் – ஆதி
2.ஈசனை பஜிச்சாலும்- இராகம் – பரசு தாளம் – சாய்பு
3.ஓணமிதம்பகு -இராகம் – வேகட தாளம் – ஆதி
4.கருணாசாகர சகலேச -இராகம் –தோடி தாளம் – ஆதி
5.கமலநாப கருண செய்க -இராகம் – தோடி தாளம் – ருபகம்
6.கருணாஜலராசே -இராகம் – கரஹரப்ரிய தாளம் – ஆதி
7.ஜயஜயஜித கோபஜாத -இராகம் – ஸாவேரி தாளம் – ஆதி
8.ஜய ராம சுலலாம -இராகம் – பைரவி தாளம் – ரூபகம்
9.ஜயஸதாஜித -இராகம் – நாட்ட தாளம் – ரூபகம்
10.ஜய பாரதீதேவி நீ -இராகம் – ஹமாஜ் தாளம் – ஆதி
11.பரிபாவனி தேவி -இராகம் – சங்கராபரணம் தாளம் – ஆதி
12.பரபாவனி பாஹி பாஹி -இராகம் – கல்லியாணி தாளம் – சாப்பு
13.பாஹி பாஹி பாவனாம்ஹி -இராகம் - தாளம் – ரூபகம்
14இபஜ பஜ ஸ்ரீராம் -இராகம் – சங்கராபரணம் தாளம் – சாய்பு
15. வந்தேமாதரம் -இராகம் – நவரஸம் தாளம் – த்ரிபுட



இராகம் – ஹமாஜ் தாளம் – ஆதி
பல்லவி
ஜய பாரதிதேவி நீ - கருணாமிருதசாலினி
ஜய பாரதீதேவி நீ
அனுபல்லவி
ஜயமிஹ பருவத்தின்ன்றிவொடு கல்மஷ
ஜாலமாசு தீர்த்தருளுக மதிமுகி (ஜய)
சரணம்
நீ கனியுகிலொரு முகனுமுருகுண
பாகலளிதகவனங்ஙளருளுமிக (ஜய)
நிஜபதநிரதரில் நிகிலகலாவலி
நைபுணாதிசயதாயினி குணபதி (ஜய)
விஜயதசமியதில் விவிதஜனவிததி
வீக்ஷிதாதிபாவே! விலசுக கிருதி (ஜய)

இராகம் – நவரஸம் தாளம் – த்ரிபுட
வ ந்தே மா தரம்
வந்தனீய குணோபேதாம் (வந்தே)
ஸாகரமேகலாளிக
மேதுரதிலகாயிதாம் (வந்தே)
மஞ்ஜூபாரண்யத்ராதி ந்நீ
புஞ்ஜகாந்திரமணியாம் (வந்தே)
சுதபுரிதரவிராம்
ஸ்பீரு சாருகீர்த்தஹாரம் (வந்தே)
தர்மசாஸ்த்ரதினிர்மாத்ரு
நிர்மலபகுதனயாம் (வந்தே)

6.கே. என் கோபாலபிள்ளை
இவர் மகாகவி கே.சி. கேசவ பிள்ளையின் மகனாவார். வெளி உலகம் அறியாது மறைந்திருந்த இவரின் கிருதிளுக்கு முனைவர் புஷ்பா சுரப்படுத்தி ஒளி கொடுத்து பிரபலப்படுத்தியுள்ளார்.
சங்கீத கிருதிகள்
ஒன்றாம் பாகம்
கெ.என்.கோபாலபிள்ளை- மைலக்காடு கொட்டியம்(கொல்லம்)
1.ஐயப்பன் திருவடி -இராகம் – கல்லியாணி தாளம் – சாய்பு
2. ஈசன் திருவடி -இராகம் – சஹன தாளம் – ஆதி
3. கருணாசாகர -இராகம் – குறிஞ்சி தாளம் – ஆதி
4. கருணாவாரிதே -இராகம் – ஆனந்தபைரவி தாளம் – ஆதி
5. கண்ணமத்து வாணீடும் -இராகம் – ஸாவேரி தாளம் – சாய்பு
6.கணநாயக -இராகம் –மாயாமாளவ கௌளா தாளம் – ருபகம்
7.சோற்றானிக்கர -இராகம் – சங்கராபரணம் தாளம் – சாய்பு
8.தேவசுப்ரமணிய -இராகம் – பைரவி தாளம் – ஆதி
9.தினமன்தவ - இராகம் – ப்யாகட தாளம் – ரூபகம்
10.பாஹிஷடானன -இராகம் – மோகனம் தாளம் – ஆதி
11.பரமபாவனரூபிணி -இராகம் – சங்கராபரணம் தாளம் – ஆதி
12.பாவயே சிவம் -இராகம் – நாட்ட தாளம் – ஆதி
13.வனஜேக்ஷணபாஹி -இராகம் – ப்ரரிகல்யாணி தாளம் – ஆதி
14.வாரிஜலோசன- இராகம் – சங்கராபரணம் தாளம் – ஆதி
15.ஸ்ரீபார்வதிபதே -இராகம் – கமாஷ் தாளம் – ரூபகம்
16.ஸ்ரீ பத்மநாபம் -இராகம் – எரிக்கில தாளம் – ஆதி
17.ஸ்ரீஹரிஹரசுனோ -இராகம் – செஞ்சுருட்டி தாளம் –ஆதி
18.சாமவேதகீர்த்தித -இராகம் – ஆனந்தபைரவி தாளம் – ஆதி
19.ஹாலோசியவாசினி -இராகம் – நீலாம்பரி தாளம் – ஆதி
ஐயப்பன் திருவடி -இராகம் – கல்லியாணி தாளம் – சாய்பு
பல்லவி
ஐயப்பன் திருவடி சரணம்
சரணமெந்நும் (ஐயப்ப)
அனுபல்லவி
அம்பாலிகாமதங்க ஸந்தானமாய் புவி
வந்து பிறந்த தேவவந்யா! ஸனாதன! (ஐயப்ப)
சரணம்
பந்தளம் ருபன் தன்றெ பந்துவாய் வனபுவி
வன்புலி மத்யத்தில் ஸஞ்சரிச்சதும் சித்ரம்
நிஸ்துல பரிவேஷ சோபித! நிர்மல!
சாஸ்தாவே பரிபாஹி கோபாலஸந்நுத! (ஐயப்ப)

இராகம் – குறிஞ்சி தாளம் – ஆதி
பல்லவி
கருணாசாகர! சாருமூர்த்தே!
காமனாசன! புரஹர! பகவன்! (கரு)
அனுபல்லவி
திருவாராட்டுகாவிங்கல் மருவுமானந்தமூர்த்தே!
ஸ்ரீகர! குணநிலய வரத! (கரு)
சரணம்
திருவடி பணிஞ்ஞீடுந்தவருடெ மனோகதம்
திறமோடறிஞ்ஞ மெல்லெ
பரதுக்கம் நீங்ஙிடுவ- னழலுந்த ஜனங்ஙள்க்கு
சாந்தியருரும் கிரிஜாரமணா! (கரு)
சங்கீத கிருதிகள் - இரண்டாம் பாகம்
இராகம் – இந்தோளம் தாளம் – ரூபகம்
பல்லவி
வேணுகான லோல
மரகதமணிநீல கிருஷ்ண (வேணு)
அனுபல்லவி
காமதானலோல அகணிதகுணசீல
ஹோரதனுஜகால காமத பசுபால கிருஷ்ண (வேணு)
சரணம்
கோமளபதஸரோஜம் ஆமயாத்திஹரணம்
மானஸமதிலன்வேலம் மாதவ விலஸீடேணம்
ஆரிலுமே வைரமேதுத் சேராதிஹ பாஹி பாஹி
ஸகலாகமப்ருஷித
கோபாலவினுத கேசவ கிருஷ்ண! (வேணு)



இராகம் – ஆரபி தாளம் – ஆதி
பல்லவி
மகாகாளி மிருத பதம் நமாமி (மஹா)
அனுபல்லவி
ஸரோஸவிமலம் மனோகரம்
பாஸமானபாரிஜாதம் (மஹா)
சரணம்
ஆதிகாரணி பூரணி மோஹினி
தேவி பாவுகம் சின்மயரூபிணி
மோகவாரியௌ வலயாதேதும்
வாஹி ஸதா கோபாலனுதே (மஹா)

1.வேணுகானலோல - இராகம் – இந்தோளம் தாளம் – ரூபகம்
2.மஹாகாளி மிருதுபதம் - இராகம் – ஆரபி தாளம் – ஆதி
3.பதஸரஸீருஹம் -இராகம் – பீஹாக் தாளம் – ஆதி
4.கமனீயானனம் - இராகம் - ஹம்சாநந்தி தாளம் – ஆதி
5.பஜரே மானஸ -இராகம் – சுருட்டி தாளம் – சாய்பு
6.கண்ணமத்து காவில் இராகம் – நாதநாமகிரிய தாளம் – ஆதி
7.ஓணமிதம்பஹூ இராகம் – காம்போதி தாளம் – ஆதி
8. திவ்யமங்கள ரூபிணி இராகம் – பூரி கல்லியாணி தாளம் – ஆதி

7.மகாகவி குட்டமத்து குஞ்சு கிருஷ்ண குருப்பு
இவர் ஒரு சிறந்த கவிஞர். இவரின் கிருதிளுக்கு முனைவர் புஷ்பா சுரப்படுத்தி பிரபலப்படுத்தியுள்ளார்.

1.பாரதி ! ஜய இராகம் – கல்யாணி தாளம் – செம்பட
2.பகவன் ! பார்க்கவ ! இராகம் – கமாசு தாளம் – திரிபுட
3.ஜய! ஜயாநந்தன! இராகம் – செஞ்சுருட்டி
தாளம் – சதுரஸ்றஜாதி த்ரிபுட
4.நாராயண ! நாராயண! இராகம் – மோகனம் தாளம் – ஆதி
5.பாலோலும் பாஷிணி! இராகம் – காவடிசிந்து
தாளம் – த்தியஸ்ரஜாதி ரூபகம்
6.கருணாகர! இராகம் – தோடி தாளம் – செம்பட

7.கோவிந்த ! ஹரிகோவிந்த! இராகம் – சாவேரி தாளம்– முறியடந்த
8.பாகி பாகி இராகம் – யதுகுலகாம்போஜி தாளம் – ரூபகம்

இராகம் – கல்லியாணி தாளம் – செம்பட
பல்லவி
பாரதி! ஜெய ஸதி! ம்ருதுசங்கீதே! (பாரதி)
அனுபல்லவி
பாசுரசாரிகாபாஷணதோஷிதே! (பாரதி)

சரணம்
நிகம்மயாவனிநிதிஹனி! ஸனாதனி!
நித்யகல்யாணி! கனவேணி! வாணி! (பாரதி! ஜய)
2.இராகம் – கமாசு தாளம் – திரிபுட
பல்லவி
பகவன்! பார்க்கவ! போ ஸ்ரீகுரோ!
அனுபல்லவி
பணித்தேன் பதனார் தே, சமிதாந்தே!
ஸல்கீத்தே! சுபமுத்தே! பாஹி (பகவன்)
சரணங்கள்
நிந்திருவடியுடெ மஹிமகளரியுவா
நாராணொரு மஹாமதி, ஜகத்ரயத்தில்? (பகவன்)
ஸம்ப்ரதி மோஹமுண்டென் பிதாவெக்காண்மான்
அம்போடதிணனுகம்பயுதிச்சீடேணம் (பகவன்)

(வாஹி ராமசந்திர! ராகவ! எந்த மட்டு)
பாஹி பாஹி பார்வதி பதே! பிரபோ! மாம்
பாவனம் தவ பாதமே கதி (வாஹி)
பாலசந்திர சேகர! ம்ம பாலனெ நீ
பாலய ஹிபோ! பாவனாஸன! (வாஹி)

8.இரைமன் தம்பி
இவரின் கிருதிளுக்கு முனைவர் புஷ்பா சுரப்படுத்தி பிரபலப்படுத்தியுள்ளார்.
ஓமனத்திங்கள்
(ஸ்ரீ இரயிம்மன் தம்பியுடெ சங்கீத கிருதிகள்)
1.மானஸிமே -இராகம் – சங்கராபரணம் தாளம் - ஆதி
2.பாகி நிகிலஜனனி- இராகம் – நாட்ட தாளம் – ஆதி
3.நீலவண்ண மாகிமாம்- இராகம் – சுருட்டி தாளம் – ஆதி
4.அடிமலரிண - இராகம் – முகாரி தாளம் - ஆதி
5.கருணபெய்வானெந்து -இராகம் – ஸ்ரீ தாளம் – ஆதி
6.செந்தார் சாயக -இராகம் – பிகாக் தாளம் – சாய்பு
7.பரதேவதே -இராகம் – தோடி தாளம் – ஆதி
8.பரதேவதே -இராகம் – தோடி தாளம் – ஆதி
9.கணபதியே- இராகம் – ஹம்ஸாநந்தி தாளம் – ஆதி

1. இராகம் – நாட்ட தாளம் – ஆதி
பல்லவி
பாஹி நிகிலஜனனி ஸததம்
அனுபல்லவி
தேவி தவ பதபக்திம் சுபதே
பவதயிதே சிவே சுஜனவரதே (பாஹி)
சரணம்
தாராதரமஞ்சுளசிகரே சு
ந்நரகபோலதலவிஜிதமுகரே
ஸொரசாகித்யம்
க்ஷீரதடாகதடநிவாஸனே ஸ்ரீ
கௌரி பகவதி சுமந்தஹஸிதே (பாஹி)

2.இராகம் – பிகாக் தாளம் – சாய்பு
பல்லவி
செந்தார்ஸாயகரூப றுப தவ
காந்தா விரஹவசால் வலயுந்நதினாந்தா
அனுபல்லவி
ஸகிமாரோடுமில்ல ஸரஸசல்லாபம்
விஜனே வாழுந்து பகுகிருதசிந்தா (செந்தார்)

சரணங்கள்
வாணிதலத்தோடு சேர்த்து கபோலம்
மருவுந்து பாஷ்பபுண்யத்ருகந்தா (செந்தார்)
இந்நு வரும் காந்தனெந்நொரு மோஹால்
எந்நு மலங்கிருத வாஸனிசாந்தா (செந்தார்)
க்ருஷன்னு ஸகியா மலர்சரதாபம்
சிவசிவ நிந்திதசந்ரவஸந்தா (செந்தார்)

3.இராகம் – ஹம்ஸாநந்தி தாளம் – ஆதி
பல்லவி
கணபதியே கருணை வள்ளலே
காத்தருள்வாய் எம்மை ஐங்கரனே (கணபதியே)
அனுபல்லவி
முக்கண்ணன் புதல்வனே மூலப்போருளே
முத்தமிழரசன் முருகன் ஸோதரனே (கணபதியே)
சரணம்
அம்மை அப்பனை வலம் வந்தாயே
அகிலமெல்லாம் அதில் அடங்க வைத்தா
துன்பங்கள் நீக்கிடும் துதிக்கையோனோயே
தூய உள்ளம் படைத்த மங்களம் தருபவனே.

9.குட்டிகுஞ்சு தங்கச்சி
இவர் இரைமன் தம்பியின் மகள்.இவரின் கிருதிளுக்கு முனைவர் புஷ்பா சுரப்படுத்தி பிரபலப்படுத்தியுள்ளார்.
கீர்த்தனம் இராகம் தாளம்
1. ஆனந்தரூபஹரே பந்துவராளி சாப்பு
2. கார்த்தியாயனி காம்போஜி ஆதி
3. காருண்யமென்னோடு ஸௌராஷ்ட்ரம் சாப்பு
4. வாகி மோகன கமாஸ் ஆதி
5. ஸாமஜகரே கல்யாணி ஆதி
6. சூரியகோடிபிரப நாட்ட சாப்பு
7. ஸ்ரீபவனபுரேச சுருட்டி ஆதி

இராகம் – வசந்தா தாளம் – ஆதி
பல்லவி
கார்த்தியாயனி மாம் பாலயாஸததம்
கால்த்தளிரிணவந்தே


அனுபல்லவி
காத்தருளுக பரமேஸ்வரிநீயே
ஆர்த்தஜனார்த்தி அகற்றும் அமேயே
சரணம்
க்ஷீரமகார்ணவ சயனனதாகும்
ஸாரஸனாப ஸகோதரிகௌரி
க்ஷீரதடாகதடாலயவாஸே
ஸ்ரீமமநல்குக தவகழல்தொழுதேன் (கார்த்தியாயனி)
9. Dr. V. R. பிரபோத சந்திர நாயர்
இவர் கேரளப் பல்கலைக்கழக மொழியியல் துறையின் பேராசிரியராவார். மற்றும் கேரள கலா மண்டலத்தின் தலைவர். தற்பொழுது அமெரிக்காவில் பணி செய்து வருகிறார். இதுவரை அநேக புத்தகங்கள், பாடல்கள் கவிதைகள், அகராதிகள், எழுதியுள்ளார். மலையாளம் சமஸ்கிருதம், ஆங்கிலம் மூன்றிலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது 2013 சங்கீத கிருதிகள் சுரதாளமிட்டு பாடலாக்க முயறிச்சித்து வருகிறார். அவை "பிரபோத சங்கீதம்” என பெயரிடப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளன. அவற்றுள் 51 பாடல்களுக்கு புஷ்பா அவா்கள் உணர்வு கொடுத்து 2015,மே 31–ஆம் நாள் குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றுள் கேரளா, தமிழ்நாட்டில் திருவட்டார் பகுதிகளில் உள்ள இறைவன்களுக்கு தோத்திரக் கிருதிகள் படைத்துள்ளார்.

பிரபோத சங்கீதம்
1. இராகம் – நாட்ட தாளம் – ஆதி
பல்லவி
அணிவெண் பட்டாம்பர ஸமலம்கிருத
மணிமண்டபமிதில் கணநாதா!
அனுபல்லவி
இளகொள்ளுக நீ மஹேஷனந்தன!
இளநீராலபிஷேபிக்கான்.
சரணம்
அவலட மலரும் கதளீ குளவும்
தவளம் சோர் நெய்பாயஸவும்
மணிமய தளிகயில் நேதிச்சீடாம்
மதிபோதம் மே தெளியணமே

2. இராகம் - காப்பி தாளம் – ஆதி
பல்லவி
அம்பலப்புழயிலே செம்பகமெய்யனெ
அம்பலக்கடவத்து காத்திரிக்கும் ஞான்
அனுபல்லவி
செம்பவிழச்சுண்டில் புஞ்சிரி, பொன்குழல்,
அன்புமாய் ஆ மாயன் வந்நு நில்க்கும்.
சரணம்
அம்பலப்பூமால பீலிகோலொத்து ஞான்
ஆம்பாடிகண்ணனு காழ்ச வய்க்கும்
அம்போதரூபன்றெ மின்னலாணீயேழ
என்றெ போதமம்மட்டில் வந்துதிக்கும்
1.அணிவெண் - இராகம் – நாட்ட தாளம் – ஆதி
2.அம்பலபுழயிலே - இராகம் - காப்பி தாளம் – ஆதி
3.அம்ருதாப்தி புத்திரி - இராகம் – ஸாரங்க தாளம் – ஆதி
4.அம்புருக லோசனி - இராகம் – மத்யமாவதி தாளம் – ஆதி
5.ஐயப்பன் தீயாட்டில்- இராகம்– அடாண தாளம் – திஸ்ர ஏக
6.ஆனந்த பைரவி -இராகம் – ஆனந்தபைரவி தாளம் – ஆதி
7.ஆற்றுகால் வாழுந்த -இராகம் – பத்துவராளி தாளம் – ஆதி
8.ஒரு நாளெங்கிலும் -இராகம் – மலயமாருதம் தாளம் – ஆதி
9.கண்ணுறங்ஙீடிலும் -இராகம் – கானட தாளம் – ஆதி
10.கலியுகவரதா- இராகம் - கௌரிமனோகரி தாளம் – ஆதி
11.கார்வர்ணா நின் -இராகம் – கல்லியாணி தாளம் - மிஸ்ரசாபு
12.குடிகொள்வு நீ -இராகம் – பூர்விக்கல்யாணி தாளம் –மிஸ்ரசாபு 13.குந்தமங்கல -இராகம் – ஹம்ஸாநந்தி தாளம் – ஆதி
14.குமாரகோவிலில் -இராகம் – ஷண்முகப்பிரியா
தாளம் – ஆதி
15.கிருஷ்ண துளசி -இராகம் – ரஞ்சினி தாளம் – ஆதி
16.கிருஷ்ணா நிந்நெ-இராகம்–காம்போஜி தாளம் – மிஸ்ரசாபு
17.க்ஷீரஜலாசய -இராகம் – ரஞ்சினி தாளம் – ஆதி
18.கஜமுக சுந்தர -இராகம் – ஹம்சதொனி தாளம் – ஆதி
19.குருபவனாலயா -இராகம் – மத்யமாவதி தாளம் – ஆதி
20.குருவாயூரிலே -இராகம் – சாருகேசி தாளம் – ஆதி
21.த்றயம்பக -இராகம் – ஷகானா தாளம் – ஆதி
22.நின் மயில் பீலி -இராகம் – ஷகானா தாளம் – மிஸ்ரசாபு
23.பஞ்சாரி மேளத்தில் -இராகம்–ஆனந்தபைரவி தாளம்–ஆதி
24.பரமபாவனி -இராகம் – காம்போஜி தாளம் – ஆதி
25.பால்கடலில் -இராகம் – கல்யாணி தாளம் – ஆதி
26.பால்குளங்கர -இராகம் – பிலகரி தாளம் – ஆதி
27.பூர்ணத்றஈஸ்வரா -இராகம் – சிந்துபைரவி தாளம் – ஆதி
28.பிரசன்னவரதே -இராகம் – பகுதாரி தாளம் – ஆதி
29.பிராசீனபண -இராகம் – நாட்ட தாளம் – ஆதி
30.மஹிஷி மர்த்தன இராகம் – நாட்டுக்குறிஞ்சி தாளம் – ஆதி
31.முக்திசொரூபிணி -இராகம் – ஹம்சதொனி தாளம் – ஆதி
32.மூகாம்பிகஷேத்ர -இராகம் – கல்யாணி தாளம் – ஆதி
33.மூலாதாரே -இராகம் – ஸாவேரி தாளம் – ஆதி
34.மோஹனராக -இராகம் – மோஹனம் தாளம் – ஆதி
35.வாங்மயி -இராகம் – ஹிந்தோளம் தாளம் – ஆதி
36.வீணாவேணு -இராகம் – வஸந்த தாளம் – ஆதி
37.வேல்முருக -இராகம் – ஸ்ரீரஞ்சினி தாளம் – ஆதி
38.சபரி கிரீஸ்வர -இராகம் – ஷண்முகப்பிரிய தாளம் – ஆதி
39.சங்கர சம்குரு -இராகம் – சாவேரி தாளம் – மிஸ்ரசாபு
40.சங்கமுகேஸ்வரி -இராகம் – முகாரி தாளம் – ஆதி
41.சாரதே வித்யா -இராகம் – சரஸ்வதி தாளம் – ஆதி
42.ஸ்ரீகண்டேஸ்வரா- இராகம் – ஆபேரி தாளம் – ஆதி
43.சிவக்ரராஜ -இராகம் – நாதநாமக்ரியா தாளம் – ஆதி
44.ஸ்ரீராம பானுவம்ச -இராகம் – சுரட்ட தாளம் – ஆதி
45.ஸ்ரீலமனோகர -இராகம் – நீலாம்பரி தாளம் – மிஸ்ரசாபு
46.சியாமள கோமள -இராகம் – கமாஸ் தாளம் – ருபகம்
47.சௌபர்ணிகாதீர- இராகம் – ஆபோகி தாளம் – ஆதி
48.ஹரிஹரசுனோ -இராகம் – பிலஹரி தாளம் – ஆதி
49.ஹிமாம்சுசேகர -இராகம் – சரஸ்வதி தாளம் – மிஸ்ரசாபு

10. திரு இரா.விக்டர்
திரு இரா. விக்டர் அவர்கள் 1930 -ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி திரு. இராஜ் சூசை முதலியார், திருமதி ஜீவ ஜெய இராஜம்பாள் என்பவர்களின் மகனாக திருப்பத்தூரில் பிறந்தார். இவரது தாயார் திருப்பத்தூர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தவர். விக்டர் அவர்களின் தந்தை இராணுவத்தில் பணி புரிந்தவர். விக்டர் அவர்களின் முழுப் பெயர் விக்டர் இம்மானுவேல் ராஜா. இவருக்கு மூத்த சகோதரி ஒருவர் உண்டு. தற்பொழுது அவர் சென்னையில் தன் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கு தற்சமயம் 88 வயது. அவர் ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர்.
விக்டர் அவர்கள் சிறு வயதிலேயே கலை, இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பாடல்களை கேட்பது , பாடல்களை எழுதுவது இவருக்கு பிடித்த காரியம். படிப்பில் ஆர்வம் நிறைந்து இருந்தது போலவே, இலக்கியத்திலும் ஈடுபாடு நிறைந்தவர். கணிதம் இவருக்கு பிடித்த பாடமாக இருந்தது. படிக்கும் காலத்திலேயே சிறு சிறு நாடகங்கள் இயற்றி பள்ளியில் மேடை ஏற்றியிருக்கிறார். "லைலா" என்ற புனை பெயரில் சிறு கதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். (கல்யாணத்திற்கு முன்பு)
முன் பட்ட படிப்பு(P.U.C) படித்ததோடு படிப்பை தொடர இயலாத சூழ்நிலையில் 21 ஆம் வயதில் அரசு பணியில் சேர்ந்தார். 1955 -இல் திருமணம் நடந்தது. மேரி எஞ்சலீன் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உண்டு.
கலை இலக்கியத்தில் எவ்வளவு ஈடுபாடு உண்டோ, அது போல பழைய நாணயங்கள் சேகரிப்பது, பழைய புத்தகங்கள், தபால் தலை சேகரிப்பு என்பதிலும் நாட்டம் கொண்டவர். புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ் மற்றும் ஆங்கில நாவல்கள் அனைத்தையும் படிக்கும் பழக்கம் உள்ளவர். புத்தகங்கள் படிப்பதன் அவசியத்தை தன் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுத்து வளர்த்தவர். நல்ல கதை அமைப்பு கொண்ட நாவல்கள், நல்ல கருத்து கொண்ட கட்டுரைகள் இவை எல்லாம் இன்றும் சேர்த்து வருகிறார்.
இவர் தனது 62-ஆம் வயதில் கர்த்தரை அறிந்து கொண்டார். அதன் பிறகு பாடல்களை எழுத ஆரம்பித்தார். கர்த்தர் தன் இருதயத்தில் பேசியதை அப்படியே பாடல் வடிவில் எழுத ஆரம்பித்து சுமார் 2000 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். எதாவது ஒரு புதுக் காரியம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருந்து கொண்டே இருந்ததால், இவரின் அறிய முயற்சியாக "நான்கு சுவிசேஷங்களின் ஒருங்கிணைப்பு" என்ற தலைப்பில் ஒரு புதிய சுவிசேஷ நூலை உருவாக்கி இருக்கிறார்.
திரு. இரா. விக்டர் அவர்கள் தாசில்தாராக பணி செய்து ஓய்வு பெற்றவர். 88 வயதாகும் இவர் தற்பொழுது மதுரையில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
(ஜாய்சி மேயர் செய்தியின் போது)
இராகம் – பிலகரி தாளம் – ஆதி
1. எதைச் செய்தாலும் அதை
சரியாகவே செய்வார் இறைவன்
அவசரத்தில் முடிவெடுத்து அதை
செயலாற்ற நினைப்பது மடமை

2. உன் முடிவு வேறு தேவனின் முடிவு
நித்திய சத்திய தர்வாகும்,
வேளை வரும் வரை காத்திரு
உனக்கென்ன சிரமம் பார்த்திரு

3. காலை மாலை தேவனை துதித்துவிடு,
மதித்து விடு அவரது வசனங்களை,
சகித்திரு அவரின் வழி நடந்து
அனைத்தையும் அவரிடம் விட்டுவிடு.


இராகம் – ஆரபி தாளம் – ஆதி சாப்பு

1. வாரும் இயேசுவே,
என்னில் வாழ்ந்திட விரைந்து,
வாரும் இயேசுவே.
2. தாரும் இயேசுவே,
உமது கிருபையை எனக்கு,
தாரும் இயேசுவே
3. காரும் இயேசுவே
என் பாவங்களை போக்கி என்னை,
காரும் இயேசுவே.
4. கூறும் இயேசுவே,
வேதத்தின் சத்தியங்களை எனக்கு,
கூறும் இயேசுவே.
5. மூடும் இயேசுவே,
உமது நிழலில் என்னை முழுதும்
மூடும் இயேசுவே.
மேலும் திருவனந்தபுரத்தின் வழுதைக்காட்டில் பாடகர் இயேசுதாஸ் அவர்களால் நடத்தப்படும் ‘தரங்க நிசரி’ சங்கீதப் பள்ளியில் முதன் முதலாக 2015 -ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 22- ஆம் நாள் செம்பை சங்கீத விழாவை தொடங்கி வைத்தவர் இவரே. அந்நிகழ்வில் லளிதா தாஸர் பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளன.
கேரளப் பல்கலைக் கழகம் நடத்தும் UGC NET இசைப் பாடத்திற்கான பயிற்சி வகுப்புகளுக்கு ஒருங்கிணைப் பாளராக இருந்து வருகிறார்.
தற்சமயம் “சட்ராக கிருதிகள்”, “கேரளத்தில் சில சங்கீத இராஜாய்தாக்கள்” எனும் இரு நூல்களை எழுதி வருகிறார்.


















5. ப.புஷ்பாகிருஷ்ணனோடு நேர்காணல்

1. கேரள மாநிலத்தில் இசைக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. அவை தொன்மையான தமிழ்/திராவிட பாரம்பரியமா அல்லது வேறு பாரம்பரியமா?
கேரளத்திற்கே உரிய இசை வடிவங்களாவன துள்ளல் பாட்டு, தெய்யம் பாட்டு, சோபன பாட்டு என்பவைகளாகும். அதைத் தவிர கருநாடக இசை என்பது தமிழ்நாட்டில் இருந்து தஞ்சாவூர், சென்னை போன்ற பகுதிகளிலிருந்து வந்த கலைஞர்களால் இங்கு படித்துக் கொடுத்ததாகும். எனவே தென்னக இசையான கருநாடக இசையின் பாரம்பரியம் தமிழ்நாட்டினையே சாரும்.
2. கேரள மண்ணில் இன்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இசைவடிவங்கள் எவைகளெல்லாம்?
துள்ளல் பாட்டு
தெய்யம் பாட்டு
சோபன பாட்டு

3. பழமையான தமிழிசைப் பண்களின் பெயர்களுக்கு கேரளத்தில் அழைக்கப்படும் மலையாளப் பெயர்கள் யாவை?
இராகப் பெயர்
தமிழ் மலையாளம்
இந்தளம் நாத நாம கிரியை
பழம்பஞ்சுரம் சங்கராபரணம்
காந்தாரம் நவரோஷ்
கௌசிகம் பைரவி
தக்கேசி காம்போதி
வியாழக்குறிஞ்சி சௌராஷ்ட்ரம்
புரநீர்மை பூபாளம்
சாதாரி பந்துவராளி
கொல்லி கேதாரம்
பழம்தக்கா ஆரபி
செவ்வழி யதுகுலகாம்போதி
திருதாண்டவம் கமாஸ்
காந்தாரபஞ்சமம் கேதார கௌடா
செந்துருத்தி மத்தியமாதவி
மேகராக்குறிஞ்சி நீலாம்பரி


4. செவ்வியல் நாட்டிய வடிவங்களான கதக்களி, மோகினி ஆட்டம் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய இராகங்கள் எவையெல்லாம்?
கதக்களி, மோகினி ஆட்டங்களுக்கு தக்கேசி, கெளசிகம், காந்தார பஞ்சமம், காந்தாரம், இந்தளம், மோகம் போன்ற இராகங்கள் பயன்படுத்தப்டபடுகின்றன.

5. நீங்கள் கிருதிகளுக்கு (பாடல்களுக்கு) இசையமைத் தலுக்கு எவ்வித முறையினை கையாளுகிறீர்கள்?
பாடல்களின் கருத்திற்கு ஏற்றது போல இசையமைக்கப்படுகிற முறையே கையாளப்படுகிறது.


6. தாங்கள் கருநாடக இசை அமைப்போடு இந்துஸ்தானி இசையமைப்பு முறையினையும் கையாளுகிறீர்களா?
ஆம், கருநாடக இசையியல் அதிகமாகவும், இந்துஸ்தானி இசையில் குறைவாக காப்பி, தேஷ், சிவரஞ்சனி, சிந்துபைரவி, ஹம்சாந்தி போன்ற இராகங்களில் பாடல்கள் நான் அமைத்துள்ளேன்.

7. இவ்விசைத்துறையில் தங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
சாதி, மத பேதமின்றி இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடல்களை இயற்றி இசையமைத்து பாடல்களை பாடி, பிள்ளைகளுக்கு பயிற்றுவித்து, பல்வேறு மேடைகளில் பாடி உலகிற்கு பிரபலப்படுத்துவதாகும்.

8. கருநாடக இசையில் நன்கு தேர்ச்சிப் பெற்றுள்ள தாங்கள் இந்துஸ்தானி இசையினைக் குறித்தும் புத்தகங்கள் படைக்க முடியுமா? ஏனெனில் தற்காலத்தில் தென்னாட்டிலும் இந்துஸ்தானி இசையின் தாக்கம் காணப்படுகிறது.
நிச்சயமாக இந்துஸ்தானி இசையைக் குறித்தான விளக்கங்களும் புத்தகங்களும் வெளியிட முடியும். அதில் துர்க்கா, கலாவதி, அமிர்கல்யாணி, யமுனா கல்யாணி, கலாவதி, மால்கௌன்ஸ், மதுமத்சாரங், சிந்துபைரவி, போன்ற இராகங்களைக் குறித்து விளக்க முடியும்.


9. கருநாடக இசையான தென்னக இசை என்பது ஆலாபனை இசை (பண் விரிவாக்கம், Improvisation) இசையாகும். ஆலாபனை என்பது குறிப்பிட்ட பண்களுக்கு மட்டுமே காணப்படுகிறது. எ.டு தோடி, கல்யாணி. இவ்வாறு ஒரு இராகத்தின் ஆலாபனை முழுவதையும் சுரப்படுத்தி (நரம்படைவு) செய்து வழங்க முடியுமா?
ஆலாபனையை சுரப்படுத்தலாம். அதாவது அதன் துவக்க பாடங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் ஆலாபனை என்பது ஒவ்வொரு தனிநபரின் பாடும் திறமைக்கேற்ப வளர்ந்து சென்று கொண்டே இருக்கும்.

10. தாங்கள் இதுவரை ஆறு விருதுகளைப் பெற்றுள்ளீர்கள், அவ்வாறு பெறும்பொழுது தாங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?
விருதுகள் கிடைப்பதென்பது சந்தோஷமான ஒன்றே. கிடைத்தபொழுதெல்லாம் இறைவனுக்கே என் நன்றியினைத் தெரிவிப்பது வழக்கம்.

11. தாங்கள் இதுவரை தென்னிசையாம் தமிழிசைக்கு பல்வேறு நற்றொண்டாற்றியிருக்கிறீர்கள். அவை நிகழ்த்துகலையான கச்சேரியாகவோ, பஜனையாகவோ மற்றும் Theoritical முறையாகவோ இருக்கலாம். அதற்கு இதுவரையிலான தகுந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதா?
எனக்கு தன்னிறைவான மனநிறைவு கிடைத்துள்ளது. ஆனால் அரசிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை.


12. தாங்கள் இத்துறையில் எதாவதொரு காரியம் செய்ய விருப்பம் கொண்டும் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறீர்களா?

ஆம், அநேக வாக்கேயக்காரர்கள் கவிஞர்களின் படைப்புகள் என்னிடம் உள்ளது. மற்றும் என் குடும்பமும் இசைச்சார் குடும்பமானதால் மேலும் பல அரிய புதையல்கள் உள்ளன. அவற்றை எல்லாம் வெளிக்கொண்டு வந்து மாணவர்களுக்கு பயிற்றுவித்து பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஆசை உண்டு. மற்றும் சாதி மத பேதமின்றி சர்வ சமயப் பாடல்களுக்கு இசையமைத்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதும் உண்டு.

13. தங்களின் உலகளாவிய தமிழிசை வளர்ச்சியின் பங்கு பற்றி கூற முடியுமா?
ஆம், எனக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் உள்ள கிருதிகளுக்கு இசையமைத்து ஒரே சமயத்தில் பாடி மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே.

14. புஷ்பா கிருஷ்ணனின் வழிகாட்டுதலில் இசையில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் லட்சுமி ஜெ. நாயரிடம் முனைவர். புஷ்பா குறித்து கருத்துக் கேட்டபொழுது குறிப்பிட்டவைகள்?
என் கல்லூரி நாட்களிலிருந்து இவரை எனக்கு நன்கு தெரியும். நல்ல கண்டிப்போடு நாம் சிறக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு படித்துக் கொடுப்பவர். கல்விசார் வளர்ச்சியை மட்டும் நோக்காமல் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர். தான் பெற்ற அறிவின் மேன்மையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து சந்தோஷம் கொள்பவர்.

15. தற்பொழுது முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி. லட்சுமி. ஆர்.எஸ், முனைவர் புஷ்பா குறித்து கூறிய கருத்துக்களாவன:
இவர் நல்லதொரு ஆளுமை சக்தியும் தலைமைத்துவம் வகிக்கும் தகுதியும் தன்னில் கொண்டவர் என்று குறிப்பிட்டார்.

16. முனைவர் புஷ்பா அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணன் அவர்கள் முனைவர் புஷ்பா அவர்களைக் குறித்து கூறியக் கருத்துக்களாவன.
எப்போதும் புதுப்புது காரியங்களை செய்ய வேண்டும் என்ற ஆர்வமுடையவர். நான் அவரின் வளர்ச்சிக்கு என்றும் பக்க துணையுமாகவும் முழு சுதந்திரமும் கொடுத்துள்ளேன் எனக் குறிப்பிட்டார். ஒவ்வொரு வருடமும், தான் குடும்பமாக இமாலயப் பிரயாணம் செய்வதாக குறிப்பிட்டார். விரும்பி வருபவர்களையும் கூடே அழைத்துச் செல்லுவதாகவும், அங்கே பல கோவில்களையும் ஆழ்ந்த தியானத்தையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதோடு, தாங்களும் விரும்பினால் அவர்களோடு சேர்ந்து வரும்படியாக அன்புடன் கூறினார்.

நிறைவாக
முனைவர் ப.புஷ்பாகிருஷ்ணன் அவர்கள் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் திருவனந்தபுரத்தில் வாழும் இசைப்பேரறிஞர். இசையைப் போன்று இனிய மொழி பேசுபவர். இசைத்துறையில் கற்று துறைபோகிய புலமை மிக்கோர். இசைப் புலமையோர். இசைக்கு ஆதரவு தந்து, அருள் உதவிகள் புரிந்து பேணிக்காப்பவர். இசைப் புணர்தலாம் பாடலுக்கு இசையமைத்தலை திறம்பட செய்பவர். இசை ஆசிரியர். தமிழ்ப்புலமையும், மலையாளப் புலமையும், ஆங்கிலப் புலமையும், இசைப் புலமையும், வீணை இசைக்கும் புலமையும் உடையவர். பாடல்கள் பலவற்றினை இசைத்தும் தொகுத்தும் அவற்றை சுரதாள குறிப்புகளுடன் வெளியிட்டும் வருகிறார்.
இவர் “கிளிப்பாட்டு” என்ற மாத இதழில் தொடர்ச்சியாக கட்டுரை எழுதி வருகிறார். தற்சமயம் இவரால் எழுதப்பட்டுள்ள “சட்ராக கிருதிகள்”, “கேரளத்தில் சில சங்கீத இராஜாய்தாக்கள்” எனும் இரு நூல்கள் பிருகத் சங்கீத கேந்திரத்தின் 20–ஆம் ஆண்டு விழா நாளான ஏப்ரல் 9, 2016 அன்று வெளியிடப்பட உள்ளன.
இன்றும் தினமும் காலை 3.30 –க்கே எழுந்து வீட்டின் அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு காலை 7.30 மணிக்கெல்லாம் இசைப்பணியை தொடங்கி விடுகிறார்.
இவரைப் பற்றிய விவரங்களை http://www.pushpakrishnan.com/ என்ற இணையதள இணைப்பில் காணலாம். மேலும் முனைவர் ப.புஷ்பாகிருஷ்ணன் அவர்களைக் குறித்து அறிய விரும்பினால் அவரின் கைபேசி எண்ணான 09447429008 –க்கு தொடர்பு கொள்ளவும்.
இவர் இசை ஆர்வலர்களிடையில் சாதி மத பேதமின்றி திறமைக்கு முக்கியத்துவம் தருபவர். இவர் இசைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

சேர்த்தவர் : ஆஷைலா ஹெலின்
நாள் : 9-Oct-16, 10:28 pm

முனைவர் பபுஷ்பாகிருஷ்ணன் - பாடலாசிரியர் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே